திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2178 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2178முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று அவனையே பாவனத்வமாகச் சொன்னீர் புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில் அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம் என்கிறார் – பிடிசேர் கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  – 97
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன் அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.
பதவுரை Show / Hide
பிடிசேர் களிறு, Pidisear Kaliru - பேடையோடு சேர்ந்து விஷயபோகபரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த, Alitha - காத்தருளின
பேராளா, Perala - மஹாநுபாவனே!
பொடிசேர், Podisear - (தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான், Anarku Am Kai Aetran - அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல், Avir Sadaimeel - ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த, Paayndha - (அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல், Punal - ஜலமயமான
கங்கை என்னும் பேர், Gangai Ennum Per - கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன், Pon - சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து, Unthan Adichernthu - உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள் அன்றே, Arul Pettraal Andrae - (பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ