| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2178 | முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று அவனையே பாவனத்வமாகச் சொன்னீர் புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில் அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம் என்கிறார் – பிடிசேர் கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு – 97 | பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன் அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர் அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன். | பிடிசேர் களிறு, Pidisear Kaliru - பேடையோடு சேர்ந்து விஷயபோகபரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை அளித்த, Alitha - காத்தருளின பேராளா, Perala - மஹாநுபாவனே! பொடிசேர், Podisear - (தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி அனற்கு அம் கை ஏற்றான், Anarku Am Kai Aetran - அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய அவிர் சடைமேல், Avir Sadaimeel - ஒளிபொருந்திய ஜடையின் மேலே பாய்ந்த, Paayndha - (அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த புனல், Punal - ஜலமயமான கங்கை என்னும் பேர், Gangai Ennum Per - கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள பொன், Pon - சிறந்த பெண் உன்தன் அடிசேர்ந்து, Unthan Adichernthu - உன்னுடைய திருவடிகளைக்கிட்டி அருள் பெற்றாள் அன்றே, Arul Pettraal Andrae - (பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ |