Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2178 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2178முதல் திருவந்தாதி || (ஸ்ரீ நம்பிள்ளை படி அவதாரிகை) அறம் பாவம் என்று இரண்டும் ஆவான் என்று அவனையே பாவனத்வமாகச் சொன்னீர் புறம்பேயும் கங்கை உள்ளிட்டவை பாவனம் அன்றோ என்னில் அதினுடைய பாவனத்வம் தத் சம்பந் தாயத்தம் என்கிறார் – பிடிசேர் கீழில் பாட்டின் உடைய வியாக்யானம் இப்பாட்டு  – 97
பிடிசேர் களிறளித்த பேராளா, உன்றன்
அடிசேர்ந் தருள்பெற்றாள் அன்றே, – பொடிசேர்
அனல்கங்கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த,
புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்.
பிடிசேர் களிறு, Pidisear Kaliru - பேடையோடு சேர்ந்து விஷயபோகபரனான (கஜேந்த்ராழ்வானாகிற) ஆண் யானையை
அளித்த, Alitha - காத்தருளின
பேராளா, Perala - மஹாநுபாவனே!
பொடிசேர், Podisear - (தான் பண்னின பாபத்துக்கு ப்ராயச்சித்தமாக) பஸ்மத்திலே சாயுமவனாகி
அனற்கு அம் கை ஏற்றான், Anarku Am Kai Aetran - அக்நிக்கு(த் தனது) அழகிய கையை ஏற்ற பாதகியான ருத்ரனுடைய
அவிர் சடைமேல், Avir Sadaimeel - ஒளிபொருந்திய ஜடையின் மேலே
பாய்ந்த, Paayndha - (அவனுடைய சுத்தியின் பொருட்டு) வந்து குதித்த
புனல், Punal - ஜலமயமான
கங்கை என்னும் பேர், Gangai Ennum Per - கங்கையென்னும் பெயர் பூண்டுள்ள
பொன், Pon - சிறந்த பெண்
உன்தன் அடிசேர்ந்து, Unthan Adichernthu - உன்னுடைய திருவடிகளைக்கிட்டி
அருள் பெற்றாள் அன்றே, Arul Pettraal Andrae - (பாபிகளைப் பரிசுத்தமாக்கும் படி) உனது திருவருளைப் பெற்றாளன்றோ