| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2182 | இரண்டாம் திருவந்தாதி || ப்ராப்த விஷயத்தில் பிறந்த பிரேம பரம்பரைகளாலே பிரகாசமான தம்முடைய சேஷத்வத்தையும்- அவனுடைய சேஷித்வத்தையும் -சொல்லுகிறது அனுமானத்தாலே கீழ் வஸ்து நிர்த்தேசம் பண்ணினாப் போலே இருக்கிறது – ஜகத் வைசித்ரி யினுடைய நிர்வாஹகத்வம் போரும் என்னை திருத்தினபடி என்று அனுசந்திக்கிறார் – விசித்ரம் ஆக்கினான் ஸ்ரீ பகவத் பிரசாத லப்தமான தம்முடைய ப்ரேம அவஸ்தா விசேஷங்களைத் தகளியும் நெய்யுமாக நிரூபியா நின்று கொண்டு சர்வ சேஷியான ஸ்ரீ மன் நாராயணனுக்குப் பரஞானம் ஆகிற உஜ்ஜ்வல தீபத்தை ஏற்றி அடிமை செய்யப் பெற்றேன் என்று க்ருதார்த்தர் ஆகிறார் – 1 | அன்பே தளியா ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான். | ஞானம் தமிழ் புரிந்த நான், Gnanam Tamil Purindha Naan - பகவத் விஷய ஜ்ஞானத்தைத் தருமதாய் த்ராவிட பாஷா ரூபமான திருவந்தாதிப் பிரபந்தத்தை (உலகத்தார்க்கு) விரும்பி வெளியிட்ட அடியேன். அன்பே தகளி ஆ, Anbe Thagali Aa - (பரபக்தியின் ஆரம்ப தசையான) ஸ்நேஹம் தகளியாகவும் ஆர்வமே நெய் ஆக, Aarvame Ney Aaga - (அந்த ஸ்நேஹம் மூலமாகப் பிறந்த) அபிநிவேசம் நெய்யாகவும் இன்பு உருகு சிந்தை இடுதிரி ஆ, Inbu Urugu Chinthai Iduthiri Aa - (பகவத் விஷயத்தின்) இனிமையாலே நீர்ப்பண்டமாக உருகுகின்ற மனமானது (விளக்குக்கு) இடப்படுகிற திரியாகவுங்கொண்டு நன்பு உருக, Nanbu Urugu - ஆத்மாவும் உருகப்பெற்று நாரணற்கு, Naaranarku - ஸ்ரீமந் நாராயணனுக்கு ஞானம் சுடர் விளக்கு ஏற்றினேன், Gnanam Sudar Vilakku Aetrinenn - பரஜ்ஞானமாகிற பிரகாசமான தீபத்தை ஏற்றினேன். |