| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2184 | இரண்டாம் திருவந்தாதி || கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே – அவ்வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்- இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் – அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் – அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் – அவன் செய்ததிலே தாம் ஈடுபடுகிறார்- அடுத்து அணித்தாகத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை ஆஸ்ரயிக்குமவர்கள் ஸ்ரீ பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் – 3 | பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம், புரிவார் புகழ்பெறுவர் போலாம், – புரிவார்கள் தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து நல்லமரர் கோமான் நகர். | பால் கடலான் பாதம், Paal Kadal Aan Paatham - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை பரிசு நறுமலரால், Parisu Narumalaral - செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு புரிவார், Purivaar - விரும்பித் தொழுமவர்கள், புரிவார்கள் தொல் அமரர், Purivargal Thol Amarar - ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும் கேள்வி, Kelvi - (கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும் துலங்கு ஒளி சேர் தோற்றத்து, Thulangu Olli Ser Thotratthu - மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான நல் அமரர் கோமான் நகர், Nal Amarar Goman Nagar - நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை புகப்பெறுவர் போலாம், Pugapperuvar Polam - அடையப் பெறுவர்கள் |