Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2184 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2184இரண்டாம் திருவந்தாதி || கீழே வானத்து அணி யமரர் ஆக்குவிக்கும் -என்றாரே – அவ்வழியாலே -இங்கே சம்சாரியானவர்கள் தாங்கள் இருந்த தேசத்திலே ப்ராக்ருதமான புஷ்பாதிகளைக் கொண்டு ஆஸ்ரயிக்கலாம் படி ஆபிமுக்யம் பண்ணி அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தவர்கள் அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் தன் ஸ்ரீ வைகுண்டத்தைப் போய் புகப் பெறுவராம்- இக்தோர் ஆச்சர்யம் இருந்தபடி என் -என்கிறார் – அவன் செயலிலே தாம் ஈடுபடுகிறார் ஆதல் – அவன் படி கிடக்கப் புகப் பெறுவராம் படியை அனுசந்திக்கிறார் ஆதல் – அவன் செய்ததிலே தாம் ஈடுபடுகிறார்- அடுத்து அணித்தாகத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளுகிற நீர்மையை யுடையவனை ஆஸ்ரயிக்குமவர்கள் ஸ்ரீ பரமபதத்தைச் சென்று பிராபிக்கப் பெறுவார் -என்கிறார் – 3
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம், – புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.
பால் கடலான் பாதம், Paal Kadal Aan Paatham - க்ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை
பரிசு நறுமலரால், Parisu Narumalaral - செவ்விகுன்றாத பரிமளம் மிக்க புஷ்பங்களைக் கொண்டு
புரிவார், Purivaar - விரும்பித் தொழுமவர்கள்,
புரிவார்கள் தொல் அமரர், Purivargal Thol Amarar - ஸாதநாநுஷ்டாந பரர்களான (இந்திரன் முதலிய) பழைய தேவர்களுக்கும்
கேள்வி, Kelvi - (கண்ணால் காண முடியாமல்) காதால் மாத்திரம் கேட்டுக் கொண்டிருக்கக் கூடியதும்
துலங்கு ஒளி சேர் தோற்றத்து, Thulangu Olli Ser Thotratthu - மிக விளங்குகின்ற ஒளி பொருந்தித் தோன்றுதலையுடையதுமான
நல் அமரர் கோமான் நகர், Nal Amarar Goman Nagar - நித்யஸூரி நாதனுடைய திவ்யநகரமான பரமபதத்தை
புகப்பெறுவர் போலாம், Pugapperuvar Polam - அடையப் பெறுவர்கள்