| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2185 | இரண்டாம் திருவந்தாதி || கீழ் தமக்குப் பிறந்த பக்தியினுடைய பிரகாரத்தைச் சொன்னாராதல் – அன்றிக்கே -இங்கனே நடப்பதொரு ஆஸ்ரயணத்தை கற்பித்து இருக்கிறபடியைத் தெரிவிக்கிறாராதல்- இதில் அவனுடைய நீர்மையை அனுசந்தித்து நிர்மமராய் வணங்குகிறார்- அன்பே தகளியா -என்று ஒரு விளக்கு ரூபித்தால் போலே ஒரு புஷ்பமாக ரூபித்து-அத்தைக் கொண்டு ஆஸ்ரயிக்கிறார்- அன்பே தகளி என்று தொடங்கி -தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -தகளி யும் நெய்யும் விளக்குமாக நிரூபித்தால் போலே தம்முடைய பக்த்யாவஸ்த விசேஷங்களை -இதழும் -அல்லியும்-தனமாய் -இருபத்தொரு – தாமரைப் பூவாக நிரூபித்துக் கொண்டு அவனை ஆஸ்ரயிக்கிறார் 4 | நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே திகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப் பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள், அங்கம்வலம் கொண்டான் அடி. | நகர் இழைத்து, Nagar Izhaithu - என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து நித்திலத்து நாள் மலர் கொண்டு, Nithilathu Naal Malar Kondu - (அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து திகழும் மணி வயிரம் சேர்த்து, Thigalum Mani Vairam Serkku - ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து நிகர் இல்லா, Nigar Illa - ஒப்பில்லாத பைங் கமலம் ஏந்தி, Paing Kamalam Aendhi - பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு பனி மலராள் அங்கம் வலம் கொண்டான், Pani Malaral Angam Valam Konda - குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய அடி, Adi - திருவடிகளை பணிந்தேன், Panindhen - வணங்கினேன். |