| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2187 | இரண்டாம் திருவந்தாதி || அறியப் போமோ -என்றாரே -ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று – இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் – ஆகில் பின்னை இங்கனே எல்லோரும் அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் -அது வேண்டா இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள் அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் – அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் – அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்- ஞானத்துக்கு விஷயம் அன்றாகில்-சூன்யம் ஆகிறதோ என்னில் அபிநிவேசத்தை உடையராய் ஆஸ்ரயிக்க வல்ல-பாக்யவான்கள் அறிவர் -என்கிறது – ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் – 6 | அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம் செறிந்த மனத்தராய்ச் செவ்வே, – அறிந்தவன்றன் பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே, காரோத வண்ணன் கழல். | அறிந்து, Arinthu - (எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்க ளையும் நன்றாக) அறிந்துகொண்டு பஞ்சேந்திரியங்களையும், Panjeendriyangalaiyum - பஞ்சேந்திரியங்களையும் உள் அடக்கி, Ul Adakki - (பட்டிமேயவொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து ஆய்மலர் கொண்டு, Aaymalar Kondu - (பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக்கொண்டு ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய், Aarvam Serintha Manathar Aay - பக்திமிகுந்த மனத்தையுடையராகி செவ்வே அறிந்து, Sevve Arinthu - (எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து அவன்தன்பேர், Avanthanper - அப்பெருமானது திருநாமங்களை ஓதி, Othi - இடைவிடாமற் சொல்லிக்கொண்டு ஏத்தும், Aethum - துதிக்கின்ற பெரும் தவத்தோர், Perum Thavaththor - மஹாபாக்யசாலிகள் கார்ஓதம் வண்ணன் கழல், Kaarotham Vannan Kazhal - கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை காண்பர், Kaanbar - கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள். |