Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2187 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2187இரண்டாம் திருவந்தாதி || அறியப் போமோ -என்றாரே -ஜ்ஞானத்துக்கு அவிஷயமாய்த் துச்சமாய் அறியப் போகாது என்றார் அன்று – இயத்தா ராஹித்யத்தை சொல்லுகிறார் – ஆகில் பின்னை இங்கனே எல்லோரும் அறியாதே இகழ்ந்து போம் இத்தனையோ என்னில் -அது வேண்டா இதர விஷயங்களில் ருசி அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் பண்ணுமவர்கள் அவன் திருவடிகளை காணப் பெறுவார் என்கிறார் – அபி நிவேசத்தை யுடையராய் ஆஸ்ரயிக்க வல்ல மஹா பாக்யவான்கள் அறிய வல்லார் -என்னுதல் – அவன் தானே காட்டக் காண்பார்க்கு அறியலாம் -என்னுதல்- ஞானத்துக்கு விஷயம் அன்றாகில்-சூன்யம் ஆகிறதோ என்னில் அபிநிவேசத்தை உடையராய் ஆஸ்ரயிக்க வல்ல-பாக்யவான்கள் அறிவர் -என்கிறது – ஆனால் இப்படி யாரும் அறியாதே இழந்து போம் அத்தனையோ -என்னில் அது வேண்டா -இதர விஷய சங்கம் அற்று அவன் திரு நாமங்களைச் சொல்லிப் புகழும் அவர்கள் அவன் திருவடிகளை பெறுவார் -என்கிறார் – 6
அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே, – அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல்.
அறிந்து, Arinthu - (எம்பெருமானுடைய வைலக்ஷண் யத்தையும் விஷயங்களின் கெடுதல்க ளையும் நன்றாக) அறிந்துகொண்டு
பஞ்சேந்திரியங்களையும், Panjeendriyangalaiyum - பஞ்சேந்திரியங்களையும்
உள் அடக்கி, Ul Adakki - (பட்டிமேயவொண்ணாதபடி தடுத்து) பகவத் விஷயத்திலே ஊன்றும்படி நியமித்து
ஆய்மலர் கொண்டு, Aaymalar Kondu - (பகவானுக்கு ஏற்கும்படி) ஆராய்ந்த புஷ்பங்களை ஸம்பாதித்துக்கொண்டு
ஆர்வம் செறிந்த மனத்தர் ஆய், Aarvam Serintha Manathar Aay - பக்திமிகுந்த மனத்தையுடையராகி
செவ்வே அறிந்து, Sevve Arinthu - (எம்பெருமானுக்கும் தமக்குமுள்ள முறைமையை) நன்றாக அறிந்து
அவன்தன்பேர், Avanthanper - அப்பெருமானது திருநாமங்களை
ஓதி, Othi - இடைவிடாமற் சொல்லிக்கொண்டு
ஏத்தும், Aethum - துதிக்கின்ற
பெரும் தவத்தோர், Perum Thavaththor - மஹாபாக்யசாலிகள்
கார்ஓதம் வண்ணன் கழல், Kaarotham Vannan Kazhal - கருங்கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருவடிகளை
காண்பர், Kaanbar - கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்.