Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2188 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2188இரண்டாம் திருவந்தாதி || இருந்தபடி இதுவான பின்பு -அவர்களில் ஆஸ்ரயிப்பார் ஆர் –என்று அறிந்து நீயும் விடாதே அவன் திருவடிகளை ப்ரீதி பூர்வகமாக அனுசந்திக்கப் பார் -என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் அவனையே உகந்தார் காண்பாரான பின்பு நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி-என்கிறார் – பிரதி பந்தகம் யுண்டாகில் செய்வது என்-என்னில் நமுசி படுமது படும் இத்தனை – அவனை உகந்தார் காண்பரான பின்பு-நீயும் அவனையே உகந்து ஆஸ்ரயி என்று திரு உள்ளத்தைப் பார்த்து சொல்லுகிறார் – பிரதிபந்தகம் உண்டாகில் செய்வது என் என்னில்-நமுசி பட்டது படும் அத்தனை – இப்படி பாக்ய உத்தரர் அடங்கலும் ஆஸ்ரயித்து வாழுகிற விஷயத்தை ப்ரீதி பூர்வகமாக நெஞ்சே – நீயும் அனுசந்திக்கப் பார்-என்கிறார் – 7
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச, தழலெடுத்த
போராழி ஏத்தினான் பொன்மலர்ச் சேவடியை
ஓராழி நெஞ்சே உகந்து.
ஆழிநெஞ்சே, Aazhinenje - ஆழ்ந்த மனமே!
கழல் எடுத்து, Kazhal Eduthu - திருவடிகளை உயரத் தூக்கினவனாயும்,
மாற்றார், Maatrar - எதிரிட்ட நமுசி முதலானவர்கள்
அழல் எடுத்த சிந்தையர் ஆய்அஞ்ச, Azhai Edutha Sindhaiyar Aay Anja - பயாக்னி கொளுந்தின நெஞ்சையுடையவர்களாய் நடுங்கும்படியாக
வாய் மடித்து, Vaai Madithu - உதட்டை மடித்துக் கடித்துக்கொண்டு
கண் சுழன்று, Kan Suzhandru - (பார்க்கிற பார்வையிலேயே அவ்வெதிரிகள் சுருண்டுவிழும்படி) கண்கள் வட்டமிட
தழல்எடுத்த போர் ஆழி, Thazhal Edutha Por Aazhi - நெருப்பையுமிழ்கிற போர் செய்யவல்ல திருவாழியாழ்வானை
ஏந்தினான், Aendinaan - தரித்தவனாயுமிருக்கிற எம்பெருமானுடைய,
பொன்மலர் சே அடியே, Ponmalar Se Adiye - அழகிய மலர்போன்ற திருவடிகளையே,
உகந்து ஓர், Uganthu Oor - விரும்பி அநுஸந்திப்பாயாக.