திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2189 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2189இரண்டாம் திருவந்தாதி || ஆனபின்பு -இது செய்யும் இடத்து சாத்ரவம் அநு வர்த்தியாதபடி செய்யப் பார் – அதாவது -பொய்யுகப்பு பாத்யமாம்படி சொல்லுகிறது -ஆஸ்ரயிக்கும் இடத்தில் ப்ரதிபந்தகம் உண்டானாலோ என்ன பூதனையை முடித்தாப் போலே நீ ஆஸ்ரயிக்க -அவன் தானே விரோதியைப் போக்கும் என்கிறார் – நமுசி பக்கல் பண்ணின வைமுக்ய பிரசங்கத்தாலே பூதனையை முடித்த படியை நினைத்து அருளிச் செய்கிறார்- பொய் உகப்பு பாதகமாம் படி சொல்லுகிறது – இப்படி ஆஸ்ரயிக்கும் இடத்தில் -பிரதிபந்தகம் உண்டானாலோ என்னில் –பூதனையை முடித்தால் போலே அவன் தானே அவற்றைப் போக்கும் என்கிறார் – 8
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, – உகந்து முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும் அலைபண்பா லானமையால் அன்று.
பதவுரை Show / Hide
உகந்து, Uganthu - யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து
உன்னை வாங்கி, Unnai Vaangi - (நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து
ஒளிநிறம் கொள் கொங்கை, Oliniram Kol Kongai - (பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை
அகம் குளிர உண் என்றான், Aham Kulira Un Enraan - (‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லிவாயிலே வைத்தாள்.
ஆனமையால், Aanamaiyaal - ஆகையினாலே,
அன்று, Andru - அவள் முலைதந்த; அக்காலத்தில்
நீயும், Neeyum - சிறு குழந்தையான நீயும்
அலை பண்பால், Alai Panbaal - அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே
முலை உண்பாய் போலே, Mulai Unbaai Pole - மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே
உகந்து, Uganthu - (பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு
முனிந்து, Muninthu - (மனத்தில்) சீற்றங் கொண்டு
ஆவி, Aavi - (அந்தப் பூதனையின்) உயிரை
உண்டாய், Undaai - உறிஞ்சி உட்கொண்டாய்.