| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2190 | இரண்டாம் திருவந்தாதி || வேணுமாகில் இவ்விஷயத்தில் நிலை நின்ற பக்தியை யுடைய யசோதைப் பிராட்டியைச் சொல்லீர் -என்கிறார் – இவளுடைய ஸ்நேஹத்துக்கு உபமானம் உண்டோ -என்கை- பூதனையை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர யசோதைப் பிராட்டியும் ஒருத்தியே -என்று உகக்குகிறார் – ஸ்ரீ யசோதை பிராட்டி உடைய-சிநேகத்துக்கு உபமானம் உண்டோ-என்கிறது – பூதனை படியை அனுசந்தித்த நெஞ்சாறல் தீர -இவ்விஷயத்தில் நிலை நின்ற ப்ரேமமுடைய ஸ்ரீ யசோதை பிராட்டியும் ஒருத்தியே என்று அவள் ஸ்நேஹத்தைக் கொண்டாடுகிறார் – 9 | அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி, நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம், பெருமுறையா லெய்துமோ பேர்த்து. | அன்று, Andru - (பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில் அதுகண்டு, Adhukandu - முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும் அஞ்சாத, Anjaadha - ‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத ஆய்ச்சி, Aaychi - யசோதைப் பிராட்டியானவள் நன்று, Nandru - தரித்து நன்று உனக்கு இரங்கி முலை தந்த, Unakku Irangi Mulai Thanda - உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த இ நீர்மைக்கு, I Neermaikku - இந்தப் பெருங் குணத்திற்கு, அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம், Andru Nee Varanmuraiyal Alanda Maa Kadal Soozh Nyaalam - முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது பெருமுறையால் எய்துமோ, Perumuraiyal Eydhumo - இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ? |