Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2192 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2192இரண்டாம் திருவந்தாதி || கா என்று கொண்டு வெறுமனே தலையிலே ஏறிடுகிறது ஏன் -தந்தாமுக்கு என்னவும் ஒரு நன்மை வேண்டாவோ என்ன இதர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூ த்ர புருஷார்த்தமான ஸ்வர்க்கத்தைப் பெற்று விடுகை போக்கி அபரிச்சேத்யமான உன்னை ஒருவரால் அறிந்து ஆஸ்ரயிக்கப் போமோ -என்கிறார் – தேவதாந்தரங்களை அனுவர்த்திக்கப் பட்ட அனர்த்தத்தை பரிஹரி என்ன -இப்படிச் செய்வார் உண்டோ என்னில் – அடைய இப்படிச் செய்து அன்றோ அனர்த்தப் படுகிறது -என்கிறார்- தேவதாந்தரங்களை அனுவர்தித்து பட்ட-அனர்த்தத்தை பரிஹரி என்ன இப்படி செய்வார் உண்டோ என்னில்-அவர் இப்படி செய்து அன்றோ அனர்த்தப்படுகிறார் நாட்டில் உள்ளார் ஷூத்ர தேவதைகளை ஆஸ்ரயித்து ஷூத்ர பலத்தைப் பெற்றுப் போமது ஒழிய சர்வாதிகனான உன்னை அறிந்து ஆஸ்ரயிக்க வல்லார் ஆர் -என்கிறார் – 11
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்.
அமரக் கடை நின்று, Amarak Kadai Nindru - தேவதாந்தரங்களின் வாசல்களைப் பற்றி நின்று
நாளும் கழல் தொழுது, Naalum Kazhal Thozhudhu - நெடுங்காலம் வரையில் (அவர்களுடைய) காலில் விழுந்து
இடைநின்ற இன்பத்தர் ஆவர், Idaininra Inbathar Aavar - நடுவே கிடக்கிற (சுவர்க்கம் முதலிய) சுகத்தைப் பெற்றொழிவர்கள்;
புடைநின்ற நீர் ஓதம் மேனி நெடுமாலே, Pudaininra Neer Otham Menni Nedumale - (இவ்வுலகைச்) சூழ்ந்து கிடக்கிற கடல் போன்ற திருமேனியையுடைய ஸர்வேச்வரனே!,
நின் அடியை, Nin Adiyai - உனது திருவடிகளை
ஓதவல்லாரவர் ஆர், Othavallaaravar Aar - அநுஸந்திக்கவல்லார் ஆரேனு முண்டோ? (யாருமில்லையே!)