| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2193 | இரண்டாம் திருவந்தாதி || ஆனால் -பின்னை அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க கடவது அன்றோ -அவர்களை ஷேபிக்கிறது ஏன் என்னில் – அவர்கள் தாங்களும் தங்களுடைய அதிகார நிமித்தமாக சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து தந்தாம் அபிமதங்களைப் பெற்றுப் போகா நின்ற பின்பு இனி -நமக்கு மேல் எல்லாம் ஆஸ்ரயிக்க வடுப்பது அவன் திருவடிகளை அன்றோ –என்கிறார் – மற்றை நிர்வாஹத்துக்கு அவர்களும் அவனைப் பற்றியோ திரிவது என்னில் -அங்கனே அன்றோ செய்வது -என்கிறார்- சிறியார் பெரியார் என்னாதே-ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை ஆஸ்ரயியாதார் எவர் – ஆனால் அந்த தேவதைகளை ஆஸ்ரயிக்க ஒண்ணாதோ -அவர்களை ஷேபிக்கிறது என் என்னில் – அவர்கள் தாங்களும் தம் தாம் அபிமதம் பெறுகைக்கு அவனை ஆஸ்ரயியா நின்ற பின்பு நமக்கும் அவனை ஆஸ்ரயிக்கை யன்றோ அடுத்து -என்கிறார் – 12 | அவரிவரென் றில்லை அரவணையான் பாதம், எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும் செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து. | எண்ணில், Ennil - (எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூபஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில் அவர் இவர் என்று இல்லை, Avar Ivar Endru Illai - இன்னார்தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசியில்லை; அரவு அணையான் பாதம், Aravu Anaiyaan Paatham - சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை வணங்கி, Vanangi - தொழுது ஏத்தாதார், Aeththathaar - துதியாதவர்கள் எவர், Evar - யாவர்? (ஒருவருமிலர்) பவரும் செழுகதிரோன், Pavarum Sezhugathiron - பரவின அழகிய ஆயிரங் கிரணங்களையுடையவனானஸூரியனும் ஒள் மலரோன், Ol Malaron - அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாகவுடைய பிரமனும் கண் நுதலோன், Kan Nuthaloon - நெற்றிக்கண்ணனான ருத்ரனும் நாளும், Naalum - நாள்தோறும் தொடர்ந்து தொழும் தகையார் அன்றே, Thodarnthu Thozhum Thakaiyaar Andrae - அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத்தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ? |