திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2195 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2195இரண்டாம் திருவந்தாதி || இங்கனே அவன் சர்வ சமாஸ்ரயணீயனாயற்ற பின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே பகவத் பஜனத்தைப் பண்ணி -உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தும் அடங்க பாவனமாம்படி பண்ணுங்கோள்-என்கிறார் – அவன் படி இதுவான பின்பு -சம்சாரிகளை எத்தித் திரியாதே -அவன் திருவடிகளிலே பணிந்து – திரு நாமங்களைச் சொல்லி -உங்களிடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை ஸூத்தம் ஆக்குங்கோள் -என்கிறார் – அவன் படி இதுவான பின்பு-சம்சாரிகளை ஏற்றித் திரியாதே அவன் திருவடிகளிலே பணிந்து-திரு நாமங்களைச் சொல்லி உங்களுடைய ஸ்பர்சத்தாலே லோகத்தை-சுத்தமாக்கிக் கொள்ளுங்கோள்-என்கிறார் அன்றிக்கே வயிறாகிய பெரும் பதியை உண்டாக்கி என்னவுமாம் இப்படி அவன் சர்வ ஸமாச்ரயணீயன் ஆனபின்பு -சம்சார வர்த்தகரான ஷூத்ரரை ஸ்தோத்ரம் பண்ணாதே – ஸ்ரீ எம்பெருமானை ஆஸ்ரயித்து நாட்டையும் உங்கள் சஞ்சாரத்தால் பரிசுத்தமாம் படி பண்ணுங்கோள் -என்கிறார் – 14
பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம் கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே, – எண்டிசையும் பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்தகரர் ஆமின் திரிந்து.
பதவுரை Show / Hide
பேதைகாள், Pethaikaal - அவிவேகிகளே!,
பண்டியை, Pandiyai - வயிற்றை
பெரு பதி ஆக்கி, Peru Pathi Aakki - பெரிய ஊர்போலக் கண்டதையுங் கொண்டு நிரம்பச் செய்து வளர்த்து
பழி பாவம் கொண்டு, Pazhi Paavam Kondu - தெரியாமல் விளையுங் குற்றங்களையும் தெரிந்து செய்யுங் குற்றங்களையும் மேன்மேலும் வளர்த்துக் கொண்டு
இங்கு, Ingu - இவ்வுலகில்
வாழ்வாரை, Vaazhvaarai - வாழ்கின்ற ஸம்ஸாரிகளை
கூறாதே, Kooraadhe - புகழ்ந்து பேசுகை தவிர்ந்து,
எண் திசையும் பேர்த்த கரம் நான்கு உடையான், En Thisaiyum Peertha Karam Naangu Udaiyaan - (உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப்போடும்படி விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களை
ஓதி, Othi - இடைவிடாது சொல்லிக்கொண்டு
திரிந்து, Thirinthu - திவ்ய தேசங்கள் தோறும் ஸஞ்சரித்து
தீர்த்தகரர் ஆமின், Theerthakarar Aamin - (உங்கள் ஸஞ்சாரத்தாலே நாடு முழுவதும்) பரிசுத்தமாம்படி செய்ய வல்லவராக ஆகுங்கோள்.