| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2196 | இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ வாமன அவதார பிரசங்கத்தாலே -இப்படி இருக்கிற ஆஸ்ரிதருடைய ரஷண அர்த்தமாக கிடீர் -அவன் தன்னை இப்படி அழிய மாறிற்று -என்று ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திலும் ஸ்ரீ ராம அவதாரத்திலும் பட்ட மிறுக்குகளை நினைத்து அதி ஸூகுமாரனான அவனுக்கு இங்கனே பட வேண்டுவதே -என்கிறார் – இவர்கள் தங்கள் உடம்பைப் பேணா- இவர்களுக்காக அவன் தன்னைப் பேணாதே துக்கப் படுவதே -என்று வெறுக்கிறார்- திரு உலகு அளந்தபடி ப்ரஸ்துதம் ஆகையால்–அல்லாத அவதாரங்களிலும் ஆஸ்ரித அர்த்தமாக மிகைப் பட்ட-இறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் இவர்கள் இப்படி தாங்கள் உடம்பைப் பேணிப் பேய்களாய்த் திரிய -இவர்களுக்காக ஸ்ரீ கிருஷ்ணனாவது -ஸ்ரீ ராமன் ஆவதாகக் கொண்டு அதி ஸூகுமாரமான திரு மேனியோடு அவன் பட்ட மிறுக்குகளை நினைத்து வெறுக்கிறார் – 15 | திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று பிரிந்தது சீதையைமான் பின்போய், – புரிந்ததுவும் கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின் தண்பள்ளி கொள்வான் றனக்கு. | வெம் சமத்து, Vem Samathu - கொடிய (பாரத) யுத்தத்திலே தேர்கடவி, Therkadavi - (பார்த்தஸாரதியாகித்) தேரை நடத்திக் கொண்டு திரிந்ததும், Thirindhathum - அலைந்ததும், அன்று, Andru - இராமனாகத் திருவவதரித்த காலத்து மான்பின் போய், Maanpin Poi - மா·சனாகிற மாயமானின் பின்னே சென்று சீதையை பிரிந்ததும், Seethaiyai Pirindhadum - பிராட்டியைப் பிரிந்து அலைச்சற்பட்டதும், கண், Kan - தரையிலே பள்ளி கொள்ள, Palli Kollai - படுத்துக் கொள்ளும்படி புரிந்ததுவும், Purindhathuvum - ஆசைகொண்டதும் நாகத்தின் தண்பள்ளிகொள்வான் தனக்கு, Naagaththin Thandpallikolvaan Thanakku - திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு அழகியதே, Azhagiyadhe - ஏற்றவையோ? |