திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2199 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2199இரண்டாம் திருவந்தாதி || தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் – அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் – அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது- இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது- இப்படி ஸமாச்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து – தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் – 18
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய், ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும் தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள், வான்கடந்தான் செய்த வழக்கு.
பதவுரை Show / Hide
குறள்உரு ஆய், Kuraluru Aay - வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து
உலகம், Ulagam - பூமி முதலிய லோகங்களை
கொண்டது, Kondadhu - ஆக்ரமித்துக் கொண்டதும்,
கோள் அரி ஆய், Kool Ari Aay - மிடுக்கையுடைய நரசிங்கமாகி
ஒண்திறலோன் மார்வத்து, Onthiralon Maarvathu - மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே
உகிர் வைத்தது, Ukir Vaiththadhu - தனது நகங்களையழுத்திக் கீண்டொழித்ததும்
ஒருநாள், Orunhaal - ஒருகாலத்திலே
தான் கடந்த, Thaan Kadandha - தான் அளந்து கொண்ட
ஏழ் உலகே, Ezhu Ulagai - எல்லாவுலகங்களையும்
உண்டதுவும், Undadhum - (பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும்
வான் கடந்தான், Vaan Kadandhaan - ஆகாசத்தையளவிட்டாலும் அளவிடவொண்ணாதபடியுள்ள பெருமையையுடையவனும்
தாமரை கண், Thamarai Kan - செந்தாமரைக் கண்ணனுமாகிய
மால், Maal - எம்பெருமான்
செய்த, Seitha - செய்தருளின
வழக்கு, Vazhakku - நியாயமான செயல்களாம்