| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2199 | இரண்டாம் திருவந்தாதி || தான் சர்வேஸ்வரனாய்-சர்வ சமாஸ்ரயணீயனாய் இருந்தானே யாகிலும் ஆஸ்ரித சம் ரஷணத்தில் வந்தால் தன்னை அழிய மாறியும் நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் – அவனை ஒழிந்த அல்லாதார் சிலர் நோக்கும் போது தந்தாம் ஸ்வரூபம் குறையாதே நின்று நோக்குவார்கள் – அங்கன் அன்றிக்கே தன்னை அழிய மாறி நோக்கும் -என்கிறது- இவன் ஜகத் ரஷணம் பண்ணும்படி சொல்லுகிறது- இப்படி ஸமாச்ரயணீயனாய் சர்வாதிகனாய் இருந்து வைத்து – தன்னை அழிய மாறியும் ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வபாவன் என்கிறார் – 18 | கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய், ஒண்டிற லோன் மார்வத் துகிர்வைத்தது – உண்டதுவும் தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள், வான்கடந்தான் செய்த வழக்கு. | குறள்உரு ஆய், Kuraluru Aay - வாமநரூபியாய் மாவலியிடஞ் சென்று யாசித்து உலகம், Ulagam - பூமி முதலிய லோகங்களை கொண்டது, Kondadhu - ஆக்ரமித்துக் கொண்டதும், கோள் அரி ஆய், Kool Ari Aay - மிடுக்கையுடைய நரசிங்கமாகி ஒண்திறலோன் மார்வத்து, Onthiralon Maarvathu - மஹா பலசாலியான இரணியனுடைய மார்பிலே உகிர் வைத்தது, Ukir Vaiththadhu - தனது நகங்களையழுத்திக் கீண்டொழித்ததும் ஒருநாள், Orunhaal - ஒருகாலத்திலே தான் கடந்த, Thaan Kadandha - தான் அளந்து கொண்ட ஏழ் உலகே, Ezhu Ulagai - எல்லாவுலகங்களையும் உண்டதுவும், Undadhum - (பிரளயங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்துக் கொண்டதும் வான் கடந்தான், Vaan Kadandhaan - ஆகாசத்தையளவிட்டாலும் அளவிடவொண்ணாதபடியுள்ள பெருமையையுடையவனும் தாமரை கண், Thamarai Kan - செந்தாமரைக் கண்ணனுமாகிய மால், Maal - எம்பெருமான் செய்த, Seitha - செய்தருளின வழக்கு, Vazhakku - நியாயமான செயல்களாம் |