Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2200 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2200இரண்டாம் திருவந்தாதி || அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் – இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் – நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது – நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்- 19
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கொன்று நீமதிக்க வேண்டா, – குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி.
வலி சகடம், Vali Sakadam - வலிதான சகடத்தை
செற்றாய், Settrai - உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய், Vazhakku Andru Kandaai - இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா, Vazhakku Endru Nee Mathikka Venda - இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
குழ கன்று, Kuzha Kandu - (அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த, Thee Vilavin Kaaykku Erindha - தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை, Theemai - இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க, Paar Vilanga - பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய், Pazhi Seithai - தவறு செய்தாய்