திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2200 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2200இரண்டாம் திருவந்தாதி || அவனாய்த்து இத்தைப் பிராப்தம் என்று நினைத்து இருக்கிறான் – இவர் அவனுடைய சௌகுமார்யத்தை அனுசந்தித்து -இது அப்ராப்தம் -என்று இருக்கிறார் – நீ ஜகத் ரஷணம் பண்ணுகிறது பழியாய் விட்டது – நம்மை அழிய மாறியும் நம் உடமையை நோக்குகை நமக்கு பிராப்தம் என்று அவன் நினைத்து இருக்க இவர் அவனுடைய ஸுகுமார்யத்தை அனுசந்தித்து இது அப்ராப்தம் என்று வயிறு எரிகிறார்- 19
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய், வழக்கொன்று நீமதிக்க வேண்டா, – குழக்கன்று தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே, பார்விளங்கச் செய்தாய் பழி.
பதவுரை Show / Hide
வலி சகடம், Vali Sakadam - வலிதான சகடத்தை
செற்றாய், Settrai - உதைத்து முறித்துத் தள்ளினாய்;
வழக்கு அன்று கண்டாய், Vazhakku Andru Kandaai - இது உனக்குத் தகுதியன்று காண்;
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா, Vazhakku Endru Nee Mathikka Venda - இது நமக்குத் தகுந்ததேயென்று நினைக்கலாகாது;
குழ கன்று, Kuzha Kandu - (அஸுரனான) இளங்கன்றை
தீ விளவின் காய்க்கு எறிந்த, Thee Vilavin Kaaykku Erindha - தீய விளங்காயை உகுக்கும் பொருட்டு வீசிப்போட்ட
தீமை, Theemai - இந்தத் தீம்பான செயல்
பார் விளங்க, Paar Vilanga - பூமியிலே பிரகாசிக்கும்படி
பழி செய்தாய், Pazhi Seithai - தவறு செய்தாய்