Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2201 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2201இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் பஜனத்திலே அடி இட்டாரோடு -தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அறஎல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் – கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து -இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் – ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயிதவர்கள் அன்றோ ஆழ்வார்கள் -என்கிறது – ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியத் தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் – 20
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, – வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்.
பழி, Pazhi - அபகீர்த்தியையும்
பாவம், Paavam - பாவங்களையும்
கை அகற்றி, Kai Akattri - நீக்கி
பல்காலும், Palkalum - எப்போதும்
நின்னை, Ninnai - உன்னை
வழிவாழ்வார், Vazhivazhvaar - வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும்
நாரணன் தன், Naaranan Than - நாராயணனான வுன்னுடைய
நாமங்கள், Naamangal - திருநாமங்களை
நன்கு உணர்ந்து, Nangu Unarnthu - நன்றாக அறிந்து
வழு இன்றி, Vazhu Indri - இடைவீடின்றி
நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம், Nangu Aeththum Kaaranangal Udaiyaar Thaam - அழகாகத்துதிப்பதற்கேற்ற உபகரணங்களையுடையவர்களும்
வாழ்னராம், Vazhnaaram - மகிழ்ந்து வாழப்பெறுவர்கள்.