| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2201 | இரண்டாம் திருவந்தாதி || ஸ்ரீ பகவத் பஜனத்திலே அடி இட்டாரோடு -தலைக் கட்டப் பெற்றாரோடு -வாசி அறஎல்லாரும் க்ருதக்ருத்யர் -என்கிறார் – கீழில்-ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து -இவனை ஆஸ்ரயித்தவர்கள் அன்றோ வாழ்வார்-என்கிறார் – ஜகத் ரஷணத்தை அனுசந்தித்து-அவனை ஆஸ்ரயிதவர்கள் அன்றோ ஆழ்வார்கள் -என்கிறது – ஸ்ரீ பகவத் ஸமாச்ரயணத்தில் முதல் அடி இட்டாரோடு -முடியத் தலைக் கட்ட பெற்றாரோடு வாசி அற க்ருதக்ருத்யர் -என்கிறார் – 20 | பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை, வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ, – வழுவின்றி நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும், காரணங்கள் தாமுடையார் தாம். | பழி, Pazhi - அபகீர்த்தியையும் பாவம், Paavam - பாவங்களையும் கை அகற்றி, Kai Akattri - நீக்கி பல்காலும், Palkalum - எப்போதும் நின்னை, Ninnai - உன்னை வழிவாழ்வார், Vazhivazhvaar - வழிப்பட்டு ஆச்ரயிக்குமவர்களும் நாரணன் தன், Naaranan Than - நாராயணனான வுன்னுடைய நாமங்கள், Naamangal - திருநாமங்களை நன்கு உணர்ந்து, Nangu Unarnthu - நன்றாக அறிந்து வழு இன்றி, Vazhu Indri - இடைவீடின்றி நன்கு ஏத்தும் காரணங்கள் உடையார் தாம், Nangu Aeththum Kaaranangal Udaiyaar Thaam - அழகாகத்துதிப்பதற்கேற்ற உபகரணங்களையுடையவர்களும் வாழ்னராம், Vazhnaaram - மகிழ்ந்து வாழப்பெறுவர்கள். |