| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2202 | இரண்டாம் திருவந்தாதி || இவர்களுடைய பரிகர சம்பத்தி இருந்தபடி -கண்டோமுக்கு நேர் கொடு நேர் நரகத்தில் புக வழி அற்று இருந்தது இங்கனே இருக்கும் இவர்கள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி என் என்று விஸ்மயப் படுகிறார் – நன்கு ஏத்தும் போது தாம் தாம் உண்டாக வேணுமே -என்னில்- இப்படி உபகரணங்கள் குறை வற்று இருக்கச் செய்தே-நரகத்துக்கு நேர் வழி கிடையாது- ஸ்ரீ எம்பெருமானை பஜிக்கைக்கு ஈடான கரண சம்பத்தில் குறைவற்று இருக்கச் செய்தேயும் -சம்சாரிகள் விலக்கடி தேடிக் கொண்டு போய்ப் புகுகிறபடி எங்கனே என்று விஸ்மாயப் படுகிறார் – 21 | தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின் பூவுளதே யேத்தும் பொழுதுண்டே, – வாமன் திருமருவு தாள்மரூவு சென்னியரே, செவ்வே அருநரகம் சேர்வ தரிது. | தாம் உளரே, Tham Ulare - (எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரணகளேபரங்களை யுடைய) சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே; தம் உள்ளம் உள்உளதே, Tham Ullum Ululadhe - (எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியேபோய்த் தேட வேண்டாதபடி) தமக்குள்ளேயிருக்கின்றதே. தாமரையின் பூ உளதே, Thamaraiyin Pu Uladhe - (எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே; ஏத்தும்பொழுது உண்டே, Ethumpozhuthu Unde - அவனை வாய்விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே; வாமன், Vaman - (தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய திரு மருவுதாள், Thiru Maruvudhal - அழகிய திருவடிகளை மருவு, Maruvu - பணிவதற்குப் பொருத்தமான சென்னியரே, Chenniyare - தலையையுடையவர்களாக இருக்கின்றார்களே; செவ்வே, Chevve - நேராக அருநரகம், Arunaragam - கொடிய நரகத்தை சேர்வது, Chervadhu - அடைவதானது அரிது, Aridhu - ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது. |