| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2203 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது- இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே – எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் – சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் – சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில் எளிதாம் வழி சொல்லுகிறார் – சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால் எல்லாம் ஸூலபம் இறே என்கிறது- சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு-சமாஸ்ரயணீயனைப் பெற்றால்-எல்லாம் சுலபம் இறே என்கிறது – தங்களுக்கு ஒரு பரிகர சம்பாத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார் 22 | அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி, பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர் வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே, தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. | பெருக முயல்வாரை, Peruga Muyalvarai - மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை பெற்றால், Perral - கிடைக்கப்பெற்றால் அரியது, Ariyadhu - செய்வதற்கு அருமையான செயலும் எளிது ஆகும், Elidhu Agum - லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்) வெண்கோடு, Venkotu - வெண்ணிறமான தந்தங்களையுடைய மால், Maal - பெரிய கரியது ஓர் யானை, Kariyadhu Or Yanai - கருநிறமுள்ள கஜேந்திராழ்வான் தண், Than - குளிர்ந்த கோடு, Kodu - பொய்கைக் கரையிலே மா, Maa - சிறந்த மலரால், Malaral - தாமரைப்பூக்களைக் கொண்டு தாழ்ந்து, Thazhndu - வணங்கியடிமை செய்ததனால் வென்று முடித்தன்றே, Vendru Muthithanre - விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ. ஆற்றலால், Aattralal - தன்னுடைய சக்தியினால் மாற்றி, Maatri - சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி |