Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2203 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2203இரண்டாம் திருவந்தாதி || இப்படி அரிதாய் இருக்கச் செய்து கொண்டதிது- இவர்களுக்கு ஒரு பரிகரம் இன்றிக்கே இருந்ததே யாகிலும் தன் பரத்தில் தான் ந்யச்த பரனாய் இருக்கவே – எளிதாக இவர்கள் ஆஸ்ரயித்தாகளாய் கொண்டு தலைக் கட்டலாய் இருக்கிறது கிடீர் – சர்வேஸ்வரன் ப்ரபாவத்தைப் பார்த்த வாறே -என்கிறார் – சம்சாரிகளுக்கு ஆஸ்ரயிக்கை எளிதாய் இருந்ததோ என்னில் எளிதாம் வழி சொல்லுகிறார் – சத்தையைப் பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு சாமாஸ்ரயணீயனைப் பெற்றால் எல்லாம் ஸூலபம் இறே என்கிறது- சத்தையே பிடித்து நோக்கிக் கொண்டு போருவான் ஒரு-சமாஸ்ரயணீயனைப் பெற்றால்-எல்லாம் சுலபம் இறே என்கிறது – தங்களுக்கு ஒரு பரிகர சம்பாத்தி அற்று இருந்ததே யாகிலும் அவன் பக்கலிலே ந்யஸ்த பரராய் இருப்பார்க்கு எளிதாக ஆஸ்ரயிக்கலாம் படி யன்றோ அவன் நீர்மையின் ஏற்றம் இருப்பது -என்கிறார் 22
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், – கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து.
பெருக முயல்வாரை, Peruga Muyalvarai - மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால், Perral - கிடைக்கப்பெற்றால்
அரியது, Ariyadhu - செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும், Elidhu Agum - லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண்கோடு, Venkotu - வெண்ணிறமான தந்தங்களையுடைய
மால், Maal - பெரிய
கரியது ஓர் யானை, Kariyadhu Or Yanai - கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண், Than - குளிர்ந்த
கோடு, Kodu - பொய்கைக் கரையிலே
மா, Maa - சிறந்த
மலரால், Malaral - தாமரைப்பூக்களைக் கொண்டு
தாழ்ந்து, Thazhndu - வணங்கியடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே, Vendru Muthithanre - விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால், Aattralal - தன்னுடைய சக்தியினால்
மாற்றி, Maatri - சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி