Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2204 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2204இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூலபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் – ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் – கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் – ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்- தன்னை ஆஸ்ரயிப்பாருக்கு–பிரதிபந்தகதையும் போக்கி-தானும் சுலபனாம் என்கிறது தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத் தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் – 23
தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், – தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.
தாழ்ந்த, Thazhndha - (பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா, Vila - விளாமரத்தினுடைய
கனிக்கு, Kanikku - பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று, Kandru - கன்றை (எறிகோலாகக் கொண்டு) வீசியெறிந்தவனாயும்
வேறு உரு ஆய், Veeru Uru Aay - (திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம், Njaalam - பூமியை
அளந்து, Alanthu - அளந்து
கொண்ட, Konda - அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன், Avan - அந்த எம்பெருமான்
தாழ்ந்து, Thazhndu - தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு, Varam Kondo - (எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால், Thakka Vagaigalal - (தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து, Vaazhndhu - ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத்ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை, Kazhivaarai - மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ளவேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும், Vazhvikum - வாழ்விப்பான்.