| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2204 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆஸ்ரயணீயன் தானே தன்னை ஆஸ்ரயித்த இவனுடைய ப்ராப்தி விரோதியான பிரபல பிரதி பந்த கங்களையும் போக்கி ஸூலபனாய் இவனுக்கு அபிமத சித்தியையும் தானே பண்ணிக் கொடுக்கும் -என்கிறார் – ஐஸ்வர்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் – கைவல்யம் அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் – ஸ்வ ப்ராப்தி அபேஷித்தார்க்கும் அத்தைக் கொடுக்கும் -என்கிறார்- தன்னை ஆஸ்ரயிப்பாருக்கு–பிரதிபந்தகதையும் போக்கி-தானும் சுலபனாம் என்கிறது தன்னை ஆஸ்ரயித்தார்களுடைய விரோதிகளை போக்கி அபிமத சித்தியையும் பண்ணிக் கொடுத்துத் தத் தத் அதிகார அனுகுணமாக ரஷிக்கும் என்கிறார் – 23 | தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால் வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும், – தாழ்ந்த விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம் அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன். | தாழ்ந்த, Thazhndha - (பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த விளா, Vila - விளாமரத்தினுடைய கனிக்கு, Kanikku - பழங்களை உதிர்ப்பதற்காக கன்று, Kandru - கன்றை (எறிகோலாகக் கொண்டு) வீசியெறிந்தவனாயும் வேறு உரு ஆய், Veeru Uru Aay - (திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய் ஞாலம், Njaalam - பூமியை அளந்து, Alanthu - அளந்து கொண்ட, Konda - அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள அவன், Avan - அந்த எம்பெருமான் தாழ்ந்து, Thazhndu - தனது திருவடிகளிலே வணங்கி வரம் கொண்டு, Varam Kondo - (எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று தக்க வகைகளால், Thakka Vagaigalal - (தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக வாழ்ந்து, Vaazhndhu - ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத்ப்ராப்தியையோ பெற்று கழிவாரை, Kazhivaarai - மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ளவேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை வாழ்விக்கும், Vazhvikum - வாழ்விப்பான். |