| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2205 | இரண்டாம் திருவந்தாதி || இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ – அடியே துடங்கி இவன் சத்தியை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்- சம்சார ப்ரவர்தகனும் அவனே என்கிறது–அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன் இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ – அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் – 24 | அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும், அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய் காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத, சீற்றத்தீ யாவானும் சென்று. | நல்நெஞ்சே, Nalnenje - நல்ல மனமே! ஆர் அருளும், Ar Arulum - பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும் கேடும், Kedum - நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும் அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானே யாவன்; ஐம்புலன், Aimpulan - பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் ;, Kaatru Thee Neer Vaan Mann Aay Nindraan Aavan Kandai - பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானேயாவன்; கருவரை, Karuvurai - கறுத்த மலைகளும் (அவன் கண்டாய்), Avan Kandai - அவனேயாம்; சென்று, Sendru - (இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும், Kaar Otham Seetrum Thee Aavaanum - கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நியாகுமவனும் அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானேயாம். |