திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2205 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2205இரண்டாம் திருவந்தாதி || இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ – அடியே துடங்கி இவன் சத்தியை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்- சம்சார ப்ரவர்தகனும் அவனே என்கிறது–அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன் இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ – அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் – 24
அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும், அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய் காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத, சீற்றத்தீ யாவானும் சென்று.
பதவுரை Show / Hide
நல்நெஞ்சே, Nalnenje - நல்ல மனமே!
ஆர் அருளும், Ar Arulum - பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும்
கேடும், Kedum - நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும்
அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன், Aimpulan - பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் ;, Kaatru Thee Neer Vaan Mann Aay Nindraan Aavan Kandai - பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானேயாவன்;
கருவரை, Karuvurai - கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்), Avan Kandai - அவனேயாம்;
சென்று, Sendru - (இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும், Kaar Otham Seetrum Thee Aavaanum - கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நியாகுமவனும்
அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானேயாம்.