Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2205 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2205இரண்டாம் திருவந்தாதி || இவனுண்டான பின்பு -இவன் அபேஷிதம் கொடுத்தான் என்று இது ஒரு ஏற்றமோ – அடியே துடங்கி இவன் சத்தியை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு-என்கிறார்- சம்சார ப்ரவர்தகனும் அவனே என்கிறது–அனைத்துக்கும் அவனே நிர்வாஹகன் இவன் உண்டான அன்று இவன் அபேக்ஷிதம் கொடுத்து ரக்ஷித்தான் -என்னும் இது ஓர் ஏற்றமோ – அடியே தொடங்கி இவனுடைய சத்தையை நோக்கிக் கொண்டு போருகிறவனுக்கு -என்கிறார் – 24
அவன்கண்டாய் நன்னெஞ்சே ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான், – அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவ ரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று.
நல்நெஞ்சே, Nalnenje - நல்ல மனமே!
ஆர் அருளும், Ar Arulum - பரிபூர்ணக்ருபையாலே உண்டாகக்கூடிய மோக்ஷமும்
கேடும், Kedum - நிக்ரஹத்தால் வரக்கூடியதான ஸம்ஸாரமும்
அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன், Aimpulan - பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் ;, Kaatru Thee Neer Vaan Mann Aay Nindraan Aavan Kandai - பஞ்சபூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானேயாவன்;
கருவரை, Karuvurai - கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்), Avan Kandai - அவனேயாம்;
சென்று, Sendru - (இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும், Kaar Otham Seetrum Thee Aavaanum - கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நியாகுமவனும்
அவன் கண்டாய், Avan Kandai - அந்த எம்பெருமானேயாம்.