திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2206 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2206இரண்டாம் திருவந்தாதி || அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் – இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது – உத்பத்தி யாதிகளேயோ -உதபன்னங்கள் ஆனால் பிரதிபந்தங்களைப் போக்குவானும் அவன் என்கிறது – இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் – அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் – 25
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால், கொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் வந்து.
பதவுரை Show / Hide
விண்ணவர் தம்வாய், Vinnavar Thamvaai - தேவர்களின் வாயினால்
ஓங்குதொல் புகழான், Onguthol Pugazhaan - உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழையுடைய எம்பெருமான்
செவ்வே, Chevve - நேராக
சென்றது, Sendradhu - சீறிச்சென்றது
இலங்கை மேல், Ilankai Mael - லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால், Than Seetrathaal - தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது, Kondradhu - ஸம்ஹரித்தது
இராவணனை, Iravanai - ராவணனையாம்;
கூறுங்கால், Kooraingkal - சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும், Vandhu Nindrathuvum - (சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே, Vey Ongu Than Saaral Vengadame - மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.