| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2206 | இரண்டாம் திருவந்தாதி || அவன் சர்வ சாதாரணனாய்க் கொண்டு நின்றபடியை சொல்லிற்று கீழ் – இங்கு ஆஸ்ரித விஷயத்தில் அவனுக்கு யுண்டான பஷபாதம் இருக்கும்படி சொல்லுகிறது – உத்பத்தி யாதிகளேயோ -உதபன்னங்கள் ஆனால் பிரதிபந்தங்களைப் போக்குவானும் அவன் என்கிறது – இப்படி சர்வ சாதாரணனாய் நின்று ரஷிக்கும் அளவன்றிக்கே ஆஸ்ரித விஷயத்தில் – அசாதாரணனாய் நின்று பக்ஷபதித்து ரஷிக்கும் படியை அருளிச் செய்கிறார் – 25 | சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால், கொன்ற திராவணனைக் கூறுங்கால், – நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் வந்து. | விண்ணவர் தம்வாய், Vinnavar Thamvaai - தேவர்களின் வாயினால் ஓங்குதொல் புகழான், Onguthol Pugazhaan - உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழையுடைய எம்பெருமான் செவ்வே, Chevve - நேராக சென்றது, Sendradhu - சீறிச்சென்றது இலங்கை மேல், Ilankai Mael - லங்காபுரியின் மேலாகும்; தன் சீற்றத்தால், Than Seetrathaal - தனக்கு வந்தேறியான கோபத்தால் கொன்றது, Kondradhu - ஸம்ஹரித்தது இராவணனை, Iravanai - ராவணனையாம்; கூறுங்கால், Kooraingkal - சொல்லுமிடத்து வந்து நின்றதுவும், Vandhu Nindrathuvum - (சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே, Vey Ongu Than Saaral Vengadame - மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம். |