| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2207 | இரண்டாம் திருவந்தாதி || கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று – ஸ்ரீ திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் – ஸ்ரீ திருமலை பிரஸ்துதம் ஆகையாலே-பின்னையும் ஸ்ரீ திருமலைக்கு உள்ளே ப்ரஸ்துதம் சொல்லுகிறது கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே திரு உள்ளம் சென்று ஸ்ரீ திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் – 26 | வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம் ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், – உந்திப் படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த, படியமரர் வாழும் பதி. | படி அமரர், Padi Amarar - நிலத்தேவரான பிராமணர்கள் வாழும், Vazhum - நித்யவாஸம் பண்ணுகிற பதி, Pathi - திருப்பதியாகிய திருமலையென்பது, வழிநின்ற, Vazhininra - (எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான ஐம்பூதம் ஐந்தும், Aimpoodham Aindhum - பஞ்சபூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும் அகத்து அடக்கி, Agathu Adakki - வெளியிற்போகவொண்ணாதபடி நியமித்து அவனை, Avanai - அவ்வெம்பெருமானை வந்தித்து, Vandithu - வணங்கி ஆர்வம் செய், Aarvam Sei - பக்தியுடையவர்களாய் உந்தி, Undhi - ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மேல்விழுந்து படி, Padi - வந்து படிகின்ற அமரர், Amarar - தேவர்களுக்காக வேலையான், Velaiyaan - திருப்பாற்கடலிலுள்ள பெருமான் பண்டு அமரர்க்கு ஈந்த, Pandhu Amararukku Eentha - முன்னைத் தேவர்களான நிர்யஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும். |