Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2207 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2207இரண்டாம் திருவந்தாதி || கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ மலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் அங்கே-திரு உள்ளம் சென்று – ஸ்ரீ திருமலைக்கு உள்ள ஐஸ்வர்யம் சொல்லுகிறார் – ஸ்ரீ திருமலை பிரஸ்துதம் ஆகையாலே-பின்னையும் ஸ்ரீ திருமலைக்கு உள்ளே ப்ரஸ்துதம் சொல்லுகிறது கீழ் ப்ரஸ்துதமான ஸ்ரீ திருமலை தான் பின்னையும் இவர்க்கு ஆகர்ஷகமாய் -அங்கே திரு உள்ளம் சென்று ஸ்ரீ திருமலைக்கு உள்ள வைலக்ஷண்யம் சொல்லுகிறார் – 26
வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய், – உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி.
படி அமரர், Padi Amarar - நிலத்தேவரான பிராமணர்கள்
வாழும், Vazhum - நித்யவாஸம் பண்ணுகிற
பதி, Pathi - திருப்பதியாகிய திருமலையென்பது,
வழிநின்ற, Vazhininra - (எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும், Aimpoodham Aindhum - பஞ்சபூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி, Agathu Adakki - வெளியிற்போகவொண்ணாதபடி நியமித்து
அவனை, Avanai - அவ்வெம்பெருமானை
வந்தித்து, Vandithu - வணங்கி
ஆர்வம் செய், Aarvam Sei - பக்தியுடையவர்களாய்
உந்தி, Undhi - ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு மேல்விழுந்து
படி, Padi - வந்து படிகின்ற
அமரர், Amarar - தேவர்களுக்காக
வேலையான், Velaiyaan - திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த, Pandhu Amararukku Eentha - முன்னைத் தேவர்களான நிர்யஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.