Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2208 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2208இரண்டாம் திருவந்தாதி || அவன் இருந்த எல்லை அளவும் வந்தவாறே இவர் திரு உள்ளம் அவன் இருந்த அளவும் செல்லக் கொழுந்து ஓடின படி சொல்லுகிறது – கீழ்த் திரு மலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த படி பரிமாற்றம் கிடையாமையாலே – நினைத்த படி பரிமாறலாம் பரம பதத்தில் இருக்கும் ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என்நெஞ்சு -என்கிறார் – கீழ் ஸ்ரீ திருமலையில் நின்றபடியை அனுசந்தித்தார் -அங்கு நினைத்த பரிமாற்றம் கிடையாமையாலே- நினைத்த படி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்தில் இருக்கிறஸ்ரீ சர்வேஸ்வரனை தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் – இப்படி ஸ்ரீ திருமலையிலே நிலையை அனுசந்தித்தவர் அங்கு நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே -நினைத்தபடி பரிமாறலாம் ஸ்ரீ பரம பதத்திலே இருக்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனைத் தேடா நின்றது என் நெஞ்சு என்கிறார் – 27
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி – கதிமிகுத்தங்
கோல்தேடி யாடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம்.
பதி, Pathi - திருமலைத் திருப்பதியிலே
அமைந்து, Amaindhu - வேரூன்றி நின்று
நாடி, Naadi - எங்கேயென்று தேடிக்கொண்டு
பருத்து எழுந்த சிந்தை, Paruthu Ezhuntha Sindhai - மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோரதத்தையுடையதாய்
மதி உரிஞ்சி, Madhi Urinji - சந்திரபதத்தையும் உராய்ந்து கொண்டு
வான்முகடு நோக்கி, Vaanmugadu Nookki - (அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்துவிட்டு
மால்தேடி, Maalthedi - பரமபதநாதனைத் தேடிக்கொண்டு
கதிமிகுத்து ஓடும், Kathimiguthu Oodum - விரைவுமிகுந்து செல்லுகின்ற
மனம், Manam - என்னெஞ்சமானது
அம்கோல் தேடி ஓடும், Amkol Thedi Oodum - அழகிய கொள் கொம்பைத் தேடிக்கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது, Kozhunthu Adhu Ponthadhu - கொடியை ஒத்திரா நின்றது.