| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2209 | இரண்டாம் திருவந்தாதி || இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்தவாறே -பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது – இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது – இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது- இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பப்புக்கவாறே-அவன் இவருடைய மனசையே விரும்பா நின்றான் என்கிறது தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் – 28 | மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், – எனைப்பலரும் தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள் மாவாய் பிளந்த மகன். | எனை பலரும், Enai Palarum - கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும் தேவாதி தேவன் எனப்படுவான், Devaadhi Devan Enappaduvaan - தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும் மாகடலான், Maakadalaan - பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும் முன் ஒரு நாள், Mun Oru Naal - முன்பொருகாலத்தில் மா வாய் பிளந்த, Maa Vaai Pilantha - குதிரையுருக்கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட மகன், Mahan - சிறுபிள்ளை யானவனும் மற்றும், Mattrum - பின்னும் நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான், Ninaippu Ariya Neel Arangathu Ullaan - நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன் மனத்து உள்ளாள், Manaththu Ullaal - என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான். |