Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2209 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2209இரண்டாம் திருவந்தாதி || இவர் திரு உள்ளம் இப்படி அபி நிவேசித்தவாறே -பார்த்த இடம் எங்கும் தனக்கு வாஸ ஸ்தானமாய் இருக்கச் செய்தே அவ்விடங்கள் போல் அன்றிக்கே இவர் திரு உள்ளத்தை தனக்கு இருப்பிடமாக ஆதரித்துக் கொண்டு வந்து புகுந்தானாய் இருக்கிறது – இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகு போக்கு இன்றிக்கே இருக்கிற படி யாவது – இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பிப் புக்க வாறே அவன் இவருடைய மனஸை விரும்பினான் -என்கிறது- இவர் அவன் பிரியா நிலத்தை விரும்பப்புக்கவாறே-அவன் இவருடைய மனசையே விரும்பா நின்றான் என்கிறது தன் திரு உள்ளம் இப்படி அபிநிவேசித்த வாறே -அவனும் அத்யபி நிவிஷுடனாய்க் கொண்டு ஸ்ரீ கோயில் ஸ்ரீ திருமலை முதலான தன் இருப்பிடங்களை உபேக்ஷித்துத் தன் திரு உள்ளத்தே வந்து புகுந்தான் -என்கிறார் – 28
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், – எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன்.
எனை பலரும், Enai Palarum - கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான், Devaadhi Devan Enappaduvaan - தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மாகடலான், Maakadalaan - பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள், Mun Oru Naal - முன்பொருகாலத்தில்
மா வாய் பிளந்த, Maa Vaai Pilantha - குதிரையுருக்கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன், Mahan - சிறுபிள்ளை யானவனும்
மற்றும், Mattrum - பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான், Ninaippu Ariya Neel Arangathu Ullaan - நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான், Vengadaththaan - திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
மனத்து உள்ளாள், Manaththu Ullaal - என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.