| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2212 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்- இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – 31 | பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும், குராநல் செழும்போது கொண்டு, – வராகத் தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர், மணியுருவம் காண்பார் மகிழ்ந்து. | பிரான் என்றும், Piraan Endrum - ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’ பெரு புலரி என்றும், Peru Pulari Endrum - ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு) நாளும், Naalum - நாள்தோறும் நல்குரா, Nalkura - நல்ல மணம்மிக்க செழு, Sezhu - அழகிய போது கொண்டு, Podhu Kondu - புஷ்பங்களைக் கொண்டு, வராகத்து அணி உருவன் பாதம், Varagathu Ani Uruvan Paatham - அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை பணியுமவர் கண்டீர், Paniyumavar Kandeer - வணங்குபவர்களே மணி உருவம், Mani Uruvam - (அப்பெருமானுடைய) திவ்யமங்கள விக்ரஹத்தை மகிழ்ந்து காண்பர், Magizhndhu Kaanbar - ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள். |