Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2212 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2212இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்- இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – 31
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு, – வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.
பிரான் என்றும், Piraan Endrum - ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும், Peru Pulari Endrum - ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு)
நாளும், Naalum - நாள்தோறும்
நல்குரா, Nalkura - நல்ல மணம்மிக்க
செழு, Sezhu - அழகிய
போது கொண்டு, Podhu Kondu - புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம், Varagathu Ani Uruvan Paatham - அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர், Paniyumavar Kandeer - வணங்குபவர்களே
மணி உருவம், Mani Uruvam - (அப்பெருமானுடைய) திவ்யமங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர், Magizhndhu Kaanbar - ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.