திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2212 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2212இரண்டாம் திருவந்தாதி || இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – தன்னையே வணங்கும்படி பண்ணினவனையும்-வணங்குகைக்கு ஈடான காலத்தையும் கொண்டாடுகிறார்- இப்படி ஆபத் சகனானவன் திருவடிகளை புஷ்பாதி உபகரணங்களைக் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்கள் அப்ராக்ருதமான அவன் திரு மேனியை ப்ரீதி பூர்வகமாக அனுபவிக்கப் பெறுவர்-என்கிறார் – 31
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும், குராநல் செழும்போது கொண்டு, – வராகத் தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர், மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.
பதவுரை Show / Hide
பிரான் என்றும், Piraan Endrum - ‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும், Peru Pulari Endrum - ‘இன்றே நல்விடிவு’ என்றும் (கொண்டாடிக்கொண்டு)
நாளும், Naalum - நாள்தோறும்
நல்குரா, Nalkura - நல்ல மணம்மிக்க
செழு, Sezhu - அழகிய
போது கொண்டு, Podhu Kondu - புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம், Varagathu Ani Uruvan Paatham - அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர், Paniyumavar Kandeer - வணங்குபவர்களே
மணி உருவம், Mani Uruvam - (அப்பெருமானுடைய) திவ்யமங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர், Magizhndhu Kaanbar - ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.