Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2213 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2213இரண்டாம் திருவந்தாதி || இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்- இவ்விஷயத்தில் நீர் செய்தது என் என்னில்-மநோ வாக் காயங்கள் அங்கே பிரவணம் ஆயிற்று என்கிறார் இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 32
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.
திருமாலே!, Thirumaale - லக்ஷ்மீபதியே!
சிந்தை, Sindhai - என் நெஞ்சமானது
மகிழ்ந்தது, Magizhndhadhu - (உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும், Mattrum - நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி, Un Paadame Potri - உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது, Magizhndhadhu - ஆநந்திக்கப்பெற்றது;
ஆகம், Aagam - என்னுடைய தேஹமானது
அழல், Azhala - எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி, Aazhi - திருவாழியையும்
சங்கம், Sangam - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை, Avai - மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும், Paadi Aadum - கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற
தொழில், Thozhil - வியாபாரத்திலே
சூழ்ந்து, Sozhndhu - பொருந்தி
துணிந்து, Thunindhu - இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது, Magizhndhadhu - களிக்கப்பெற்றது.