| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2213 | இரண்டாம் திருவந்தாதி || இவர் இப்படி உபதேசித்த அனந்தரம் -இவர் தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – இவ்விஷயத்தில் என் மனோ வாக் காயங்கள் பிரவணம் ஆய்த்து-என்கிறார்- இவ்விஷயத்தில் நீர் செய்தது என் என்னில்-மநோ வாக் காயங்கள் அங்கே பிரவணம் ஆயிற்று என்கிறார் இப்படி உபதேசித்த அநந்தரம் -தம்முடைய கரணங்கள் உபதேச நிரபேஷமாக அங்கே பிரவணமான படியை அருளிச் செய்கிறார் – 32 | மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும் மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த தழலாழி சங்க மவைபாடி யாடும், தொழிலாகம் சூழ்ந்து துணிந்து. | திருமாலே!, Thirumaale - லக்ஷ்மீபதியே! சிந்தை, Sindhai - என் நெஞ்சமானது மகிழ்ந்தது, Magizhndhadhu - (உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது; மற்றும், Mattrum - நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும் உன் பாதமே போற்றி, Un Paadame Potri - உன் திருவடிகளையே துதித்து மகிழ்ந்தது, Magizhndhadhu - ஆநந்திக்கப்பெற்றது; ஆகம், Aagam - என்னுடைய தேஹமானது அழல், Azhala - எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற ஆழி, Aazhi - திருவாழியையும் சங்கம், Sangam - ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும் அவை, Avai - மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும் பாடி ஆடும், Paadi Aadum - கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற தொழில், Thozhil - வியாபாரத்திலே சூழ்ந்து, Sozhndhu - பொருந்தி துணிந்து, Thunindhu - இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு மகிழ்ந்தது, Magizhndhadhu - களிக்கப்பெற்றது. |