| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2214 | இரண்டாம் திருவந்தாதி || கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் – மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது – இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது – மகிழ்ந்த மாத்ரமேயோ–வேறொரு இடத்துக்கு ஆகாத படி யாயிற்று -என்கிறார் கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று – இதில் அவனை அனுபவிக்கையாலே மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் – 33 | துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம் அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும் வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே, வாய்திறங்கள் சொல்லும் வகை. | சிந்தை, Sindhai - என்மனமானது துழாய் அலங்கல் அணிந்தவன் பேர், Thuzhai Alangal Anindhavan Per - திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை பல்கால், Palkal - பலமுறை உள்ளத்து, Ullaththu - நினைப்பதில் துணிந்தது, Thunindhadhu - த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது; அங்கமும் (பல்கால்), Angamum Palkal - எனது உடலும் எப்போதும் பணிந்தது, Panindhadhu - வணங்குவதாயிரா நின்றது; வாயும், Vayum - என் வாக்கும் வேய் பிறங்குசாரல், Veiy Pirangusaaral - மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய விறல் வேங்கடவனை, Virhal Vengadavanai - திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது திறங்களே, Thirangaley - தன்மைகளையே (பல்கால்), Palkal - எப்போதும் சொல்லும் வகை, Sollum Vagai - சொல்லுகிற விதத்திலே (துணிந்தது), Thunindhadhu - துணிவு கொண்டதாயிற்று. |