திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2214 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2214இரண்டாம் திருவந்தாதி || கீழ் அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று -இதில் அவனை அனுபவிக்கையிலே மனோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் – மகிழ்ந்த மாத்திரமேயோ -வேறு ஒரு இடத்துக்கு ஆகாதபடி ஆய்த்தின -என்கிறது – இத்தால் அனந்யார்ஹம் ஆனபடியைச் சொல்லுகிறது – மகிழ்ந்த மாத்ரமேயோ–வேறொரு இடத்துக்கு ஆகாத படி யாயிற்று -என்கிறார் கீழே அனுபவத்தால் பிறந்த ஹர்ஷம் சொல்லிற்று – இதில் அவனை அனுபவிக்கையாலே மநோ வாக் காயங்கள் அத்யவசித்த படியை அருளிச் செய்கிறார் – 33
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம் அணிந்தவன்பே ருள்ளத்துப் பல் கால், – பணிந்ததுவும் வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே, வாய்திறங்கள் சொல்லும் வகை.
பதவுரை Show / Hide
சிந்தை, Sindhai - என்மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர், Thuzhai Alangal Anindhavan Per - திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால், Palkal - பலமுறை
உள்ளத்து, Ullaththu - நினைப்பதில்
துணிந்தது, Thunindhadhu - த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்), Angamum Palkal - எனது உடலும் எப்போதும்
பணிந்தது, Panindhadhu - வணங்குவதாயிரா நின்றது;
வாயும், Vayum - என் வாக்கும்
வேய் பிறங்குசாரல், Veiy Pirangusaaral - மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விறல் வேங்கடவனை, Virhal Vengadavanai - திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே, Thirangaley - தன்மைகளையே
(பல்கால்), Palkal - எப்போதும்
சொல்லும் வகை, Sollum Vagai - சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது), Thunindhadhu - துணிவு கொண்டதாயிற்று.