Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2215 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2215இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் – உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது ஏவம் விதமான இப்பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் – 34
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலாரால் முன்னே, – மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி.
முன்னே, Munnay - முற்காலத்திலே
வகையால், Vagaiyaal - உபாயத்தினால்
அவனி, Avani - பூமியை
இரத்து, Iraththu - (மாவலிபக்கல்) யாசித்து
அளந்தாய், Alandhai - அளந்து கொண்டவுன்னுடைய
பாதம் புகையால், Paatham Pugaiyaal - திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால், Narumalaraal - நல்ல பரிமளமுள்ளபுஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி, Miga Vayndha Anbu Aakki - மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
எத்தி, Eththi - துதித்து
இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால், En Paakkiyathaal - நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன், Unakku Adimai Pattan - உனக்குத் தொண்டனாய் விட்டேன்.