| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2215 | இரண்டாம் திருவந்தாதி || இப்படிப் பட்ட பெரிய பேறு தான் தேவருடைய கடாஷத்தாலே பெற்றேன் -என்கிறார் – உன் சௌந்தர்யத்துக்கு தோற்று-அடிமைப்படும்படி நீயே முன்னே-கிருஷி பண்ணினாய் என்கிறது ஏவம் விதமான இப்பெரிய பேறு தான் தேவருடைய கடாக்ஷத்தாலே பெற்றேன் என்கிறார் – 34 | வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம், புகையால் நறுமலாரால் முன்னே, – மிகவாய்ந்த அன்பாக்கி யேத்தி யடிமைப்பட்டேனுனக்கு, என்பாக்கி யத்தால் இனி. | முன்னே, Munnay - முற்காலத்திலே வகையால், Vagaiyaal - உபாயத்தினால் அவனி, Avani - பூமியை இரத்து, Iraththu - (மாவலிபக்கல்) யாசித்து அளந்தாய், Alandhai - அளந்து கொண்டவுன்னுடைய பாதம் புகையால், Paatham Pugaiyaal - திருவடிகளை தூபங்கொண்டும் நறுமலரால், Narumalaraal - நல்ல பரிமளமுள்ளபுஷ்பங்களைக்கொண்டும் மிக வாய்ந்த அன்பு ஆக்கி, Miga Vayndha Anbu Aakki - மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே எத்தி, Eththi - துதித்து இனி, Ini - மேலுள்ள காலமெல்லாம் என் பாக்கியத்தால், En Paakkiyathaal - நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே உனக்கு அடிமைப்பட்டேன், Unakku Adimai Pattan - உனக்குத் தொண்டனாய் விட்டேன். |