| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2216 | இரண்டாம் திருவந்தாதி || அப்படித் தானே வந்து -அர்த்தியாய் -மேல் விழுகிற சர்வேஸ்வரனை விட்டு இதர விஷயங்களிலே சங்கத்தைப் பண்ணி -துக்கானுபவம் பண்ணாதே அவன் திருவடிகளிலே அல்ப அனுகூல்யம் பண்ணுவார்கள் ஆகில் அது தான் இவர்களுக்கு என்றைக்கும் ரஷையாய்த் தலைக் கட்டும் என்கிறார் – இவ்விஷயம் இருக்க சப்தாதி விஷயம் இனிது என்று ஜகத்து அனர்த்தப் படுவதே –என்று வெறுக்கிறார்- இவ்விஷயம் கிடக்க-சப்தாதி விஷயங்கள் இனிது என்று இருப்பதே என்று வெறுக்கிறார் – இப்படி அல்ப அனுகூல்யம் பற்றாசாகத் தானே மேல் விழுந்து -சர்வ ரக்ஷைகளையும் பண்ணும் உன்னை விட்டுச் சேதனர் சப்தாதி விஷயங்களில் மண்டி அநர்த்தப் படுவதே -என்று வெறுக்கிறார் – 35 | இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற, இனிதென்பர் தண்ணீரும் எந்தாய், – இனிதென்று காமநீர் வேளாது நின்பெரு மை வேட்பரேல், சேமநீ ராகும் சிறிது. | எந்தாய், Endhaai - என் ஸ்வாமி யானவனே! காமம், Kaamam - ஹேயமான சப்தாதி விஷயங்களை இனிது என்பர், Inidhu Enbar - போக்யமாகக் கொள்பர்; தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர், Thanneer Adhanilum Aatravum Inidhu Enbar - அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்; காமம் நீர், Kaamam Neer - (கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும் இனிது என்று வேளாது, Inidhu Endru Velaadhu - போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல் நின் பெருமை சிறிது வேட்பர் ஏல், Nin Perumai Siridhu Vedpar Ael - உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது) சேமம் நீர் ஆகும், Semaam Neer Aagum - (எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையையுடையதாகும் |