திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2218 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2218இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் – சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் – நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் -என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்- சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார் இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் – 37
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே, திருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின் பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும் ஏதங்க ளெல்லா மெமக்கு.
பதவுரை Show / Hide
இரு, Iru - பெரிய
தண், Than - குளிர்ந்த
கமலத்து, Kamalaththu - திருநாபிக்கமலத்தின்
இரு மலரின் உள்ளே, Iru Malarin Ullae - பெருமை பொருந்திய பூவில்
திருந்து, Thirundhu - ஸமர்த்தனான
திசைமுகனை, Thisaimughanai - நான்முகக் கடவுளை
தந்தாய், Thandhaai - படைத்தருளின பெருமானே!
பொருந்திய, Porundhiya - ஸர்வலோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தியிருக்கிற
நின், Nin - உன்னுடைய
பாதங்கள், Paathangal - திருவடிகளை
ஏத்தி, Aethi - வாயாரத் துதித்து
பணியா ஏல், Paniya Ael - வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு, Emakku - எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம், Pal Pirappum Ellam - பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள், Aethangal - பயனற்றவையே யாம்