| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2218 | இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜன்மங்கள் அடைய வ்யர்த்தம் என்கீறார் – சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாதாகில் ஜன்மங்கள் வ்யர்த்தங்கள் என் தான் – நம்மை ஆஸ்ரயியாத போது அவை யடங்க வ்யர்த்தமாக வேணுமோ என்னில் -என்னிருந்த படி இதுவன்றோ -என்கிறார்- சரண்யனைப் பற்றி ஆஸ்ரயியாகில்–ஜன்மங்கள் எனக்கு துக்கம்-என்கிறார் இப்படிப்பட்ட சர்வேஸ்வரனை ஆஸ்ரயியாத ஜென்மங்கள் எல்லாம் வ்யர்த்தம் -என்கிறார் – 37 | இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே, திருந்து திசைமுகனைத் தந்தாய், – பொருந்தியநின் பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும் ஏதங்க ளெல்லா மெமக்கு. | இரு, Iru - பெரிய தண், Than - குளிர்ந்த கமலத்து, Kamalaththu - திருநாபிக்கமலத்தின் இரு மலரின் உள்ளே, Iru Malarin Ullae - பெருமை பொருந்திய பூவில் திருந்து, Thirundhu - ஸமர்த்தனான திசைமுகனை, Thisaimughanai - நான்முகக் கடவுளை தந்தாய், Thandhaai - படைத்தருளின பெருமானே! பொருந்திய, Porundhiya - ஸர்வலோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தியிருக்கிற நின், Nin - உன்னுடைய பாதங்கள், Paathangal - திருவடிகளை ஏத்தி, Aethi - வாயாரத் துதித்து பணியா ஏல், Paniya Ael - வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால் எமக்கு, Emakku - எங்கட்டு பல் பிறப்பும் எல்லாம், Pal Pirappum Ellam - பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம் ஏதங்கள், Aethangal - பயனற்றவையே யாம் |