| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2219 | இரண்டாம் திருவந்தாதி || இனி எந்த ஜன்ம பலமாகி யாகிறது -எங்கனே செய்தால் என்னில் பிறர்க்கு ஆனவற்றைத் தனக்காக அபிமானித்து இருக்கை அன்றிக்கே ஸ்ரீ யபதியுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே ஜென்மத்துக்கு பிரயோஜனமும் நாம் கொள்ளும் காரியமும் -என்கிறார் அர்த்தத்தை புருஷார்த்தம் என்று புத்தி பண்ணி இராதே ஸ்ரீ யபதியை அனுபவிக்குமதுவே எல்லார்க்கும் செய்யப் படுவது -என்கிறார்- எமக்கு என்று அர்த்தத்தை புருஷார்த்தமாக புத்தி பண்ணி இராதே ஸ்ரீயபதியை ஆஸ்ரயித்து இரு என்கிறார்- அநர்த்த கரமான அர்த்தத்தை புருஷார்த்தம் என்று இராதே -ஸ்ரீ யபதியை நினைப்பது – ஏத்துவதாய்க் கொண்டு ஆஸ்ரயிக்கையே -சர்வர்க்கும் கர்தவ்யம் என்கிறார் – 38 | எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே, தமக்கென்றும் சார்வ மறிந்து , – நமக்கென்றும் மாதவனே யென்னும் மனம்படைத்து மற்றவன்பேர் ஓதுவதே நாவினா லோத்து. | இரு நிதியம், Iru Nidhiyam - (இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை எமக்கு என்று, Emakku Endru - தங்களுடையதாக நினைத்து ஏமாந்து இராதே, Aemaandhu Iraadhe - மனச்செருக்குக் கொண்டிராமல் தமக்கு என்றும் சார்வம் அறிந்து, Thamakku Endrum Saarvam Arindhu - தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தையறிந்து நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து, Namakku Endrum Maadhavane Ennum Manam Padaiththu - ‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று துணிந்திருக்கும் நெஞ்சையுடையராய் மற்று, Mattru - அதற்குப்பின்பு அவன் பேர், Avan Per - அத்திருமாலினது திருநாமங்களை ஓதுவதே, Othuvathe - ஸங்கீர்த்தநம் பண்ணுவதே நாவினால் ஒத்து, Naavinal Oththu - நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம். |