Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2220 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2220இரண்டாம் திருவந்தாதி || நாவினால் ஒதுகையாகிறது தான் எங்கனே செய்கை என்னில் -சகல வேத சஙக்ரஹமான திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு வேதாந்தங்களில் சொல்லுகிற மரியாதை குறையாமல் ஆஸ்ரயிக்க வல்லார் அங்கனே யாஸ்ரயிப்பது – அது மாட்டாதவர்கள் அப்பரப்பு எல்லாத்தாலுமாக சங்க்ருஹீதமான அர்த்தம் ஸ்ரீ யபதியானவனுடைய திரு நாமங்களைச் சொல்லுகையே – ஆனபின்பு அவ்வழியாலே பற்றப் பாருங்கோள்-என்கிறார் – இந்த்ராதிகளையும் ஆஸ்ரயணீயாராக வேதாந்தங்களிலே சொல்லா நின்றனவே -நீரும் ப்ராமாணிகராய் இருந்து ஸ்ரீ லஷ்மீ பதியே சமாஸ்ரயணீயர் என்று சொல்லுகிற படி எங்கனே என்னில் உங்களுக்கு அபிதா நவ்ருத்தியாய் தாத்பர்ய ஜ்ஞானம் இல்லாமல் சொல்லுகிறி கோள்- தாத்பர்ய ஜ்ஞானம் யுன்டாகில் அவர்களைச் சொல்லுகிற இது விபூதி மானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான் ஸ்ரீ லஷ்மீ பதியே -என்று இருங்கோள் என்கிறார் – இந்த்ராதிகளையும் ஆஸ்ரய ணீ யாராகச் சொல்லா நிற்கச் செய்தே-நீரும் பிரமாணிகராய் இருந்து- ஸ்ரீ லஷ்மி பதியே சமாஸ்ரயணீயன் என்று சொல்லுகிறபடி-எங்கனே என்னில் உங்களுக்கு அபிதான வ்ருத்தியேயாய்-தாத்பர்ய ஞானம் இல்லாமையாலே சொல்லுகிறிகோள்- தாத்பர்ய ஞானம் உண்டாகில்-அவர்களைச் சொல்லுகிறது விபூதித்வேந – விபூதிமானாய் சமாஸ்ரயணீயனாய் இருப்பான்-லஷ்மி பதியே என்று இருங்கோள் என்கிறார்- நாவினால் ஓதுகை யாவது தான் ஏது என்ன -சகல வேத சங்க்ரஹமான ஸ்ரீ திரு மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டு வேதாந்தத்தில் சொல்லுகிற மர்யாதையாலே பக்தி மார்க்கத்தில் நின்று ஆஸ்ரயிங்கோள் என்றும் அது மாட்டாதார் -ஸ்ரீ த்வயத்தில் கட்டளையில் -ஸ்ரீ யபதியானவன் திரு நாமத்தைச் சொல்லி ஆஸ்ரயிங்கோள் -என்றும் இரண்டு வகையாக ஆஸ்ரயணத்தை-அதிகார அநு குணம் விதிக்கிறார் – 39
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே,
உத்தமன்பேர் ஏத்தும் திறமறிமி னேழைகாள்,- ஓத்தனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.
ஏழைகாள், Ezhaikal - ‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை, Oththu Adhanai - வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல், Vallir Ael - ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று, Nandru - அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல், Adhanai Maattir Ael - அது செய்ய சக்தியற்றவர்களாகில்
மாதவன் பேர், Maadhavan Per - திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே, Solluvathe - உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு, Othin Surukku - ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே, Othin Porul Mudivum Ithanaiye - வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன், Uththaman - புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர், Per - திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம், Aeththum Thiram - (அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின், Arimin - தெரிந்து கொள்ளுங்கள்.