| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2221 | இரண்டாம் திருவந்தாதி || கீழே வேதாந்தத்தால் நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே – இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் – அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது -ஆனபின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது – அதுதானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள் -என்கிறார்- நீங்கள் நிற்கிற நிலை பொல்லாது-கடுக ஸ்ரீயபதியினுடைய திருவடிகளை நினையுங்கோள்- இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச் சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 40 | சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார் நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத போகத்தா லில்லை பொருள். | ஐயார், Aiyaar - கோழையானது சுருக்காக வாங்கி, Surukkaka Vaangi - சரீரத்தைச் சுருங்க வலித்து சுலாவி நின்று, Sulaavi Nindru - உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று நெருக்காமுன், Nerukkaamun - (உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே, திரு பொலிந்த ஆகத்தான் பாதம், Thiru Polintha Aagaththaan Paatham - பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை நீர் நினைமின், Neer Ninaimin - நீங்கள் சிந்தியுங்கோள்: அறிந்தும், Arindum - பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும் அறியாத, Ariyadha - அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல போகத்தால், Pogaththal - சப்தாதி விஷயங்களால் பொருள் இல்லை, Porul Illai - ஒரு ப்ரயோஜனமுமில்லை. |