திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2221 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2221இரண்டாம் திருவந்தாதி || கீழே வேதாந்தத்தால் நிச்சயித்ததான அம்சம் இது என்றாரே – இதுவும் ஒரு வார்த்தா மாதரம் சொன்னான் என்று இராதே அதில் அர்த்த பூதனைக் கடுக புத்தி பண்ணப் பாருங்கோள்-என்கிறார் – அவனை ஒழிந்தது ஒன்றுக்கு ஒரு வஸ்துத்வம் இன்றிக்கே இருந்தது -ஆனபின்பு பற்றப் படுவான் அவனேயாய் இருந்தது – அதுதானும் ஓரளவிலே வந்தவாறே செய்கிறோம் என்று இராதே கடுகச் செய்யப் பாருங்கோள் -என்கிறார்- நீங்கள் நிற்கிற நிலை பொல்லாது-கடுக ஸ்ரீயபதியினுடைய திருவடிகளை நினையுங்கோள்- இப்படியான பின்பு -ஸமஸ்த வேதங்களுக்கும் தாத்பர்ய பூதனான ஸ்ரீ யபதியைச் சரம தசா பன்னராவதற்கு முன்னே கடுக ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 40
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார் நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத போகத்தா லில்லை பொருள்.
பதவுரை Show / Hide
ஐயார், Aiyaar - கோழையானது
சுருக்காக வாங்கி, Surukkaka Vaangi - சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று, Sulaavi Nindru - உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன், Nerukkaamun - (உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம், Thiru Polintha Aagaththaan Paatham - பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின், Neer Ninaimin - நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும், Arindum - பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத, Ariyadha - அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால், Pogaththal - சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை, Porul Illai - ஒரு ப்ரயோஜனமுமில்லை.