| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2222 | இரண்டாம் திருவந்தாதி || திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே – அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்- தன் கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன் திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே -தம் வைஸ்யத்துக்கு உடலாய்த் தம் திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் – 41 | பொருளால் அமருலகம் புக்கியல லாகாது அருளா லறமருளு மன்றே, – அருளாலே மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே, நீமறவேல் நெஞ்சே நினை. | அமருலகம், Amarulagam - சுவர்க்கலோகத்தை பொருளால், Porulal - ‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன் புக்குஇயலல் ஆகாது, Pukkuyiyalal Aagathu - போய்ச்சேர முயல்வது தகாது; அருளான், Arulaan - பரமதயாளுவான எம் பெருமான் அறம், Aram - புண்யத்தின் பயனான சுவர்க்கலோகத்தை அருளும் அன்றே, Arulum Andrae - தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்; அருளாலே, Arulale - கிருபையினாலே மா மறை யோர்க்கு, Maa Marai Yorkku - மஹர்ஷிகளுக்கு ஈந்த, Eentha - முக்தியளித்த மணிவண்ணன் பாதமே, Manivannan Paathame - நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே நெஞ்சே நீ மறவேல், Nenjey Nee Maraveyl - நெஞ்சே! நீ மறவாதே நினை, Ninai - தியானித்துக் கொண்டிரு. |