திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2222 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2222இரண்டாம் திருவந்தாதி || திருப் பொலிந்த ஆகத்தான் பாதம் நினைமின் என்றாரே – அனந்தரம் அது தான் தமக்கு யுடலாகத் தன திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான வடிவழகை யுடையவனை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார்- தன் கிருபையாலே தன்னைக் கொடுக்குமவன் திருவடிகளை மறவாதே கொள்-அவற்றை நினை கீழ் பிறருக்குத் தாம் உபதேசித்த உபதேசம் அவர்கள் திருந்துகைக்கு உடல் அன்றிக்கே -தம் வைஸ்யத்துக்கு உடலாய்த் தம் திரு உள்ளத்தைக் குறித்து ஸ்ரமஹரமான ஸ்ரீ சர்வேஸ்வரன் திருவடிகளை நீ முந்துற முன்னம் மறவாதே கிடாய் -என்கிறார் – 41
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது அருளா லறமருளு மன்றே, – அருளாலே மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே, நீமறவேல் நெஞ்சே நினை.
பதவுரை Show / Hide
அமருலகம், Amarulagam - சுவர்க்கலோகத்தை
பொருளால், Porulal - ‘இதுவும் ஒரு புருஷார்த்தம்’ என்கிற எண்ணத்துடன்
புக்குஇயலல் ஆகாது, Pukkuyiyalal Aagathu - போய்ச்சேர முயல்வது தகாது;
அருளான், Arulaan - பரமதயாளுவான எம் பெருமான்
அறம், Aram - புண்யத்தின் பயனான சுவர்க்கலோகத்தை
அருளும் அன்றே, Arulum Andrae - தன் க்ருபையாலே கிடைக்கச் செய்வனாம்;
அருளாலே, Arulale - கிருபையினாலே
மா மறை யோர்க்கு, Maa Marai Yorkku - மஹர்ஷிகளுக்கு
ஈந்த, Eentha - முக்தியளித்த
மணிவண்ணன் பாதமே, Manivannan Paathame - நீலமணி நிறத்தவனான எம்பெருமானது திருவடிகளையே
நெஞ்சே நீ மறவேல், Nenjey Nee Maraveyl - நெஞ்சே! நீ மறவாதே
நினை, Ninai - தியானித்துக் கொண்டிரு.