| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2223 | இரண்டாம் திருவந்தாதி || புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் – அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்- சம்சார சுகத்தை துறந்தவர்கள்-அத் தோளைத் தொழப் பெறுவார்கள்- இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் – 42 | நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண, நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், – மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம், துறந்தார் தொழுதாரத் தோள். | திருமாலை, Thirumalai - லக்ஷ்மீநாதனான எம்பெருமானை நீண்ட தோள் காண நினைப்பான், Neenda Thol Kaana Ninaippaan - (அவனது) சிறந்த திருத்தோள் களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன். நினைப்பார், Ninaippaar - இப்படி நினைப்பவர்கள் ஒன்று பிறப்பும் நேரார், Ondru Pirappum Neeraar - ஒருவகை யோனிப் பிறப்பையும் அடையமாட்டார்கள் அத்தோள், Atthol - அந்தத் திருத்தோள்களை தொழுதார், Thozhudhar - தொழுமவர்கள் மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார், Manaippaal Pirandhaar Pirandhu Eydhum Peer Inbam Ellama Thurandhaar - ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால் அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர். |