திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2223 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2223இரண்டாம் திருவந்தாதி || புறம்புள்ள சம்சார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்கள் இறே ஜென்மங்களில் பிரவேசியாதார் -என்கிறார் – அத் தோளை நினைக்குமவர்கள்-சம்சாரத்தை ஒரு நாளும் கிட்டார்கள்- சம்சார சுகத்தை துறந்தவர்கள்-அத் தோளைத் தொழப் பெறுவார்கள்- இவ்வருகு யுண்டான சம்சார போகங்களில் விரக்தராய் கொண்டு அவனை ஸ்மரிக்கும் அவர்கள் இறே ஜன்மங்களிலே பிரவேசியாதார் ஆகிறார் -என்கிறார் – 42
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண, நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், – மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம், துறந்தார் தொழுதாரத் தோள்.
பதவுரை Show / Hide
திருமாலை, Thirumalai - லக்ஷ்மீநாதனான எம்பெருமானை
நீண்ட தோள் காண நினைப்பான், Neenda Thol Kaana Ninaippaan - (அவனது) சிறந்த திருத்தோள் களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.
நினைப்பார், Ninaippaar - இப்படி நினைப்பவர்கள்
ஒன்று பிறப்பும் நேரார், Ondru Pirappum Neeraar - ஒருவகை யோனிப் பிறப்பையும் அடையமாட்டார்கள்
அத்தோள், Atthol - அந்தத் திருத்தோள்களை
தொழுதார், Thozhudhar - தொழுமவர்கள்
மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார், Manaippaal Pirandhaar Pirandhu Eydhum Peer Inbam Ellama Thurandhaar - ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால் அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.