| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2224 | இரண்டாம் திருவந்தாதி || நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் – எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவாரைத் தொழ அமையும் – அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் – தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும் இத்தனை என்கிறார் – எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் – அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் – 43 | தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும், தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், – தாளிரண்டும், ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே, என் சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு? | தோள் இரண்டு எட்டு எழும் மூன்றும், Thol Irandu Ettu Ezhum Moondrum - இருபது தோள்களும் வீழ, Veela - முடியும்படி சரம் துரந்தான், Saram Thurandhaan - அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய தாள் இரண்டும், Thaal Irandum - இரண்டு திருவடிகளையும் தொழுவார் ஆர், Thozhuvaar Aar - தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது) முடி அனைத்தும், Mudi Anaithum - (பத்தாகிய) எல்லாத் தலைகளும் தாள் இரண்டும், Thaal Irandum - இரண்டு கால்களும் பாதம் அவை, Paatham Avai - திருவடிகளை தொழுவது அன்றே, Thozhuvathu Andrae - ஸேவிப்பதன்றோ என் சீர் கெழுதோள் செய்யும் சிறப்பு, En Seer Kezhuthol Seyyum Sirappu - எனது அழகியதோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம். |