Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2224 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2224இரண்டாம் திருவந்தாதி || நம்மால் அது துறக்கவும் போகாது -நினைக்கவும் போகாது -அவன் தானே தன்னை யுகந்தார் உடைய விரோதிகளைப் போக்கும் ஸ்வ பாவத்தில் ஈடுபட்டு இருக்குமவர்கள் திருவடிகளே நமக்கு உத்தேச்யம் -என்கிறார் – எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவாரைத் தொழ அமையும் – அத் தோளைத் தொழுவார்களைத் தொழும் அத்தனை -என்கிறார் – தோளைத் தொழ அறியோம்–அத் தோளை தொழுவர் தாளைத் தொழும் இத்தனை என்கிறார் – எனக்கு அவன் தோள் தொழ வேண்டா -தொழுவார் தொழ அமையும் – அத் தோள் தொழுவார் தாளைத் தொழும் அத்தனை நாம் -என்கிறார் – 43
தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான், – தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே, என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு?
தோள் இரண்டு எட்டு எழும் மூன்றும், Thol Irandu Ettu Ezhum Moondrum - இருபது தோள்களும்
வீழ, Veela - முடியும்படி
சரம் துரந்தான், Saram Thurandhaan - அம்புகளைச் செலுத்தின பெருமானுடைய
தாள் இரண்டும், Thaal Irandum - இரண்டு திருவடிகளையும்
தொழுவார் ஆர், Thozhuvaar Aar - தொழுகிறவர்கள் எவரோ (அவர்களது)
முடி அனைத்தும், Mudi Anaithum - (பத்தாகிய) எல்லாத் தலைகளும்
தாள் இரண்டும், Thaal Irandum - இரண்டு கால்களும்
பாதம் அவை, Paatham Avai - திருவடிகளை
தொழுவது அன்றே, Thozhuvathu Andrae - ஸேவிப்பதன்றோ
என் சீர் கெழுதோள் செய்யும் சிறப்பு, En Seer Kezhuthol Seyyum Sirappu - எனது அழகியதோள்கள் (எனக்குச்) செய்யும் உபகாரமாம்.