Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2225 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2225இரண்டாம் திருவந்தாதி || இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் – ஸ்ரீ பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே ஸ்ரீ பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் – இதில் ஸ்ரீ எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் – திருநாமத்தை சொன்னவர்களுக்கு-பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் – இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் – 44
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.
சிறந்தார்க்கு, Sirandhaarkku - ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம், Ezhuthunai Aam - உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம், Naamam - திருநாமத்தை
மறந்தாரை, Marandhaarai - மறப்பவர்களை
மானிடம் ஆ, Maanidam Aa - மநுஷ்ய்யோனியிற் பிறந்தவர்களாக
வையோன், Vaiyon - என்னெஞ்சில் கொள்ளமாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து, Aram Thaangum Maadhavane Ennum Manam Padaiththu - “தர்மஸ்தாபநம் பண்ணவல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால், Sem Kanmaal - செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று, Mattru - மேலும்
அவன் பேர், Avan Per - அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே, Naavinal Othuvadhe - நாவினால் சொல்லுவதையே
உள்ளு, Ullu - (ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)