திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2225 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2225இரண்டாம் திருவந்தாதி || இப்படி அசலைக் காக்கும்படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் என்கிறார் – ஸ்ரீ பாகவதர் உத்தேச்யர் ஆனவோ பாதி அபாகவதரும் த்யாஜ்யராக கடவது இறே ஸ்ரீ பகவத் சம்பந்தம் யுடையாரே வஸ்து பூதர் -அவர்கள் எனக்கு நாதர் என்கிறார் – இதில் ஸ்ரீ எம்பெருமானை யறியாதார் அவஸ்துக்கள்-எனக்கு அவர்களோடு சம்பந்தம் இல்லை -என்கிறார் – திருநாமத்தை சொன்னவர்களுக்கு-பிராக்ருதங்களில் அருசியைப் பண்ணுவித்து உத்க்ரமண தசையில் ஆதி வாஹருக்கு முன்னே தானே துணையாக கொண்டு போகக் கடவனாம் – இப்படி அசல் காக்கும் படி பண்ண வல்ல விஷயத்தை ஆஸ்ரயியாதே மறந்து இருக்குமவர்கள் சேதனர் அல்லர் கிடீர் -என்கிறார் – 44
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம், மறந்தாரை மானிடமா வையேன், அறம்தாங்கும் மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர் ஓதுவதே நாவினா லுள்ளு.
பதவுரை Show / Hide
சிறந்தார்க்கு, Sirandhaarkku - ஸ்ரீவைஷ்ணவோத்தமர்களுக்கு
எழுதுணை ஆம், Ezhuthunai Aam - உஜ்ஜீவந ஹேதுவான துணையாகின்ற
நாமம், Naamam - திருநாமத்தை
மறந்தாரை, Marandhaarai - மறப்பவர்களை
மானிடம் ஆ, Maanidam Aa - மநுஷ்ய்யோனியிற் பிறந்தவர்களாக
வையோன், Vaiyon - என்னெஞ்சில் கொள்ளமாட்டேன்
அறம் தாங்கும் மாதவனே என்னும் மனம் படைத்து, Aram Thaangum Maadhavane Ennum Manam Padaiththu - “தர்மஸ்தாபநம் பண்ணவல்ல திருமாலே!“ என்று கூவியழைக்கும்படி யான அத்யவஸாயங்கொண்டு
செம் கண்மால், Sem Kanmaal - செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய
மற்று, Mattru - மேலும்
அவன் பேர், Avan Per - அவனது திருநாமத்தை
நாவினால் ஓதுவதே, Naavinal Othuvadhe - நாவினால் சொல்லுவதையே
உள்ளு, Ullu - (ப்ராப்தமென்று) அநுஸந்தித்திரு. (நெஞ்சமே! என்று விளி வருவித்துக் கொள்க)