| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2226 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி பகவத் பஜனம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களின் யுடைய லாப அலாபங்களால் வரும் சோக ஹர்ஷங்களை யுடையர்கள் அல்லர் கிடீர் -என்கிறார் – நித்ய ஸூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயனாவனுடைய திருவடிகளைப் பயிலும் அவர்கள் அர்த்தத்தின் யுடைய லாப அலாபங்களுக்கு ஈடு படார் -என்கிறார்- நித்ய சூரிகளுக்கு ஸ்ப்ருஹணீயமானவனுடைய-திருவடிகளை பயிலுமவர்கள் அர்த்ததினுடைய லாப அலாபங்களுக்கு ஈடுபடார் இப்படி பகவத் பஜநம் பண்ணி இருக்குமவர்கள் இதர விஷயங்களினுடைய லாப அலாபங்களால் வரும் ஹர்ஷ சோகங்களை உடையர் அல்லர் கிடீர் -என்கிறார் – 45 | உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று, தளர்தல் அதனருகும் சாரார், – அளவரிய வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும், பாதத்தான் பாதம் பயின்று. | அளவு அரிய வேதத்தான், Alavu Ariya Vedaththan - அளவிட முடியாதபடி அந்நதமாயுள்ள வேதங்களினால் பிரதிபாதிக்கப்படுபவனும் வேங்கடத் தான், Venkatat Than - திருமலையிலே வந்து நிற்பவனும் பயின்று, Payinru - பழகி (இருக்குமவர்கள்) உளது என்று இறுமாவார், Uladu Enru Irumavan - தமக்குச் செல்வமுள்ள தென்று செருக்குக் கொள்ள மாட்டார்கள் உண்டு இல்லை என்று, Undu Illai Enru - (செல்வம்) நேற்று இருந்து இன்று அழிந்த போயிற்றென்று விண்ணோர் முடிதோயும் பாதத்தான், Vinnor Mutithoyum Pathaththan - நித்யஸூரிகளின் முடிகள் பணியப்பெற்ற திருவடிகளையுடையனுமான எம்பெருமானுடைய பாதம், Patham - திருவடிகளிலே தளர்தல் அதன் அருகும் சாரார், Thalartal Atan Arugum Sarar - தளர்ச்சியடையும் ஸ்வபாவத்தின் கிட்டவும் செல்ல மாட்டார்கள். |