| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2228 | இரண்டாம் திருவந்தாதி || அவன் இப்படி விரும்பின பின்பு நீங்களும் அவன் உகந்த படி பரிமாறப் பாருங்கோள்-என்கிறார் – அவன் ஸ்வ பாவம் இப்படி யானபின்பு-எல்லாரும் அவனை ஆஸ்ரயியுங்கோள் -என்கிறது – அவன் இப்படி உங்களைப் பெறுகைக்காகப் பல ஸ்ரீ திருப்பதிகளிலும் புகுந்து செறிந்து கிருஷி பண்ணும் ஸ்வபாவனான பின்பு எல்லாரும் க்ருதஞ்ஞராய் அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் – 47 | மாலை யரியுருவன் பாத மலரணிந்து, காலை தொழுதெழுமின் கைகோலி, – ஞாலம் அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால் உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து. | ஞாலம், Njaalam - பூமி முழுவதையும் அளந்து, Alanthu - ஒரு கால் அளந்தும் இடந்து, Idanthu - மற்றொருகால் (வராஹமாகி) இடந்தும் உண்டு, Undu - (பிரளயத்தில்) திருவயிற்றினுள் வைத்தும் உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்தியும் இப்படியெல்லாம் (ரக்ஷணத்தொழில்) செய்த அண்ணலை, Annalai - ஸர்வ ஸ்வாமியான எம்பெருமானை மற்று அல்லால், Mattru Allaal - கீழ்ச்சொன்ன வகையான ரக்ஷணத் தொழில்கள் தவிரவும் உளம் கிடந்த ஆற்றல், Ulam Kidantha Aatral - (அன்பருடைய நெஞ்சை உருக்கிக்கொண்டு அவர்களுடைய) நெஞ்சிலேகிடக்கும் விதங்களோடுகூட உணர்ந்து, Unarndhu - அநுஸந்தித்து, (முன்பொருகால் ப்ரஹ்லாதனுக்கருள் செய்வதற்காக) மாலை, Maalai - மாலைப்பொழுதிலே அரி உருவன், Ari Uruvan - நரசிங்கமூர்த்தியாய்த் தோன்றின அப்பெருமானுடைய பாதம், Patham - திருவடிகளை மலர், Malar - புஷ்பங்களாலே அணிந்து, Anindhu - அலங்கரித்து காலை, Kaala - சிற்றஞ சிறுகாலையில் கைகோலி தொழுது, Kaikoli Thozhudhu - கைகூப்பிவணங்கி எழுமின், Ezhumin - உஜ்ஜீவியுங்கள் |