Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2229 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2229இரண்டாம் திருவந்தாதி || நீர் இப்படி மறக்க ஒண்ணாத படி அனுசந்திக்கைக்கு ஆஸ்ரிதர்க்காக வந்து செய்தன ஏதேனும் உண்டோ என்ன தேவர் பண்ணின யுபகாரம் ஓர் அளவிலேயோ என்கிறார் – கீழே சொன்ன மற்றல்லால் -என்கிறது இருக்கும் படி – எல்லாரும் உன்னை உணரும்படி–எல்லாத்தையும் உண்டாக்கினாய் – உளம் கிடந்த வாற்றால் -என்று ஆஸ்ரிதற்கு மறக்க ஒண்ணாத படியாக நான் செய்த செயல் தான் ஏது என்ன -அதுக்கு ஓர் எல்லை இல்லை -என்கிறார் – 48
உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே. – மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை.
மாலே, Maale - ஸர்வேச்வரனே!
மறை நான்கும், Marai Naanthum - நான்கு வேதங்களையும்
உணர்ந்தாய், Unarndhaai - (பிரளயந்தோறும்) ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து பிறகு வெளியிடுகின்றாய்
நீதி, Neethi - அந்த வேதங்களின் பொருளை விவரிக்க வல்ல ஸ்ம்ருதி முதலிய உபப்ரும்ஹண நூல்களையும்
ஓதினாய், Othinai - (மநுமுதலிய மஹர்ஷிகள் முகமாக) அருளிச்செய்கின்றாய்
மலர் மகள், Malar Magal - பூவிற்பிறந்த பெரிய பிராட்டியாருடைய
தோள், Thol - திருத்தோளோடே
மணந்தாய், Manandhai - கூடி வாழ்கின்றாய்
வேய் இரும் சாரல், Vey Irum Saaral - மூங்கில்கள் நிறைந்த தாழ்வரையையுடையதும்
இரு ஞாலம் சூழ், Iru Nyaalam Soozh - பரந்த இப்பூமியிலுள்ளவர்களால் பிரதக்ஷிணஞ் செய்யப்படுவதுமான
மாயிருஞ் சோலமலைபோய், Maayirunj Cholamalai Poi - திருமாலிருஞ் சோலைமலையிலேவந்து
மணந்தாய், Manandhai - திருவுள்ளமுவந்து வாழ்கின்றாய்