திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2230 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2230இரண்டாம் திருவந்தாதி || நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா – ஆனபின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் – ஸ்ரீ திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார் நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே சந்நிஹிதன் ஆனபின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் – 49
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர, குலைசூழ் குரைகடல்க ளேழும், – முலைசூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று, அஞ்சாதென் னெஞ்சே அழை.
பதவுரை Show / Hide
என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே!
மலை ஏழும், Malai Ezhum - ஸப்த குலபர்வதங்களும்
மா நிலங்கள் ஏழும், Maa Nilangal Ezhum - ஸப்தத்வீபங்களும்
குலை சூழ் குரை கடல்கள் ஏழும், Kulai Soozh Kurai Kadalgal Ezhum - கரையாலே சூழப்பட்டு ஒலிசெய்கிற ஸப்த ஸாகரங்களும்
அதிர, Adhira - அதிரும்படியாக
நாவன் என்று, Naavan Endru - திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி
முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை, Mulai Soozhntha Nanju Urathu Pennai - “முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையையுடைய (பூதனையென்னும்) பேய்மகனை
நவின்று, Navinru - (முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக்கொண்டே
உணட, Unada - உண்டுமுடித்த
அஞசாது, Anjasadhu - கூசாமல்
அழை, Azhai - வாய்விட்டுக்கூப்பிடு