| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2230 | இரண்டாம் திருவந்தாதி || நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதனான பின்பு நமக்கு ஒரு ப்ரதிபந்தகம் யுண்டு என்று அஞ்ச வேண்டா – ஆனபின்பு ஜகத்தடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு -என்கிறார் – ஸ்ரீ திருமலையை விரும்பின பின்பு லோகம் எல்லாம் அதிரும்படி-அவன் பேரைச் சொல்லி அழை என்கிறார் நெஞ்சே அவன் இப்படி ஸ்ரீ திருமலையிலே சந்நிஹிதன் ஆனபின்பு -நமக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டு என்று அஞ்சாதே ஜகத்து அடங்கலும் அதிரும்படி அவனைச் சொல்லிக் கூப்பிடு என்கிறார் – 49 | மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர, குலைசூழ் குரைகடல்க ளேழும், – முலைசூழ்ந்த நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று, அஞ்சாதென் னெஞ்சே அழை. | என் நெஞ்சே, En Nenchae - எனது மனமே! மலை ஏழும், Malai Ezhum - ஸப்த குலபர்வதங்களும் மா நிலங்கள் ஏழும், Maa Nilangal Ezhum - ஸப்தத்வீபங்களும் குலை சூழ் குரை கடல்கள் ஏழும், Kulai Soozh Kurai Kadalgal Ezhum - கரையாலே சூழப்பட்டு ஒலிசெய்கிற ஸப்த ஸாகரங்களும் அதிர, Adhira - அதிரும்படியாக நாவன் என்று, Naavan Endru - திருப்பவளத்தை யுடையவளே!“ என்று சொல்லி முலை சூழ்ந்த நஞ்சு உரத்து பெண்ணை, Mulai Soozhntha Nanju Urathu Pennai - “முலையில் வியாபித்த விஷத்தாலுண்டான கொடுமையையுடைய (பூதனையென்னும்) பேய்மகனை நவின்று, Navinru - (முலையுண்ணும்போது) இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லிக்கொண்டே உணட, Unada - உண்டுமுடித்த அஞசாது, Anjasadhu - கூசாமல் அழை, Azhai - வாய்விட்டுக்கூப்பிடு |