Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2231 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2231இரண்டாம் திருவந்தாதி || திரு உள்ளத்தைக் கூப்பிடு என்றாரே -அநந்தரம்- திரு வாய்ப்பாடியில் உள்ள பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லப் புகத் தளர்ந்து தலைக் கட்ட மாட்டாதே சொல்லுமா போலே தாம் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார்- திரு ஆய்ப்பாடியில் அவர்கள் சொன்னவற்றை அனுசந்திக்கப் புக்கால் பிழைக்க அரிதாய் அத்தாலே அரை ஷணம் விடப் போகாத திரு நாமங்களைச் சொல்லி ஸ்ரீ ய பதியை அழைப்பன்- இப்படி நெஞ்சைக் கூப்பிடச் சொல்லி நியமித்தவர்-அநந்தரம் திரு வாய்ப்பாடியில் பெண்கள் அவன் திரு நாமங்களைச் சொல்லி – உகப்பாரோடு உகவாதாரோடு வாசியற எல்லார் முன்பும் ஸ்ரீயபதியான அந்த ஸ்ரீ சர்வேஸ்வரனை -அவர்களுக்கு இரங்கினால் போலே நம் பக்கலிலும் இரங்கக் கூடும் என்று கூப்பிடா நின்றேன் – 50
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி, – இழைப்பரிய
ஆயவனே யாதவனே என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து.
இழைப்பு அரிய, Izhaiyppu Ariya - ஆராய்வதற்கு அருமையான ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய
ஆயவனே என்றும், Aayavaney Endrum - கோபால க்ருஷ்ணனே!என்றும்
மாயவனே என்றும், Maayavaney Endrum - (குணசேஷ்டிதங்களினால்) ஆச்சரியபூதனே என்றும்!
மதித்து, Mathithu - அநுஸந்தித்துக் கொண்டு
ஆங்கு அவர்கள் சொன்ன, Aangu Avargal Sonna - அத்திருவாய்ப்பாடியிலுள்ளவர்கள் சொல்லியழைத்த யதுகுலத்தில்
யாதவனே என்றும், Yaadhavane Endrum - (வஸுதேவர்மகனாய்த்) தோன்றினவனே என்றும்!
பிழைப்பு இல்பெரு பெயரே பேசி, Pizhaippu Ilperu Peyare Paesi - குற்றமற்ற சிறந்த திருநாமங்களையே பேசி
யார் முகப்பும், Yaar Mukappum - எல்லாரெதிலும்
திருமாலை அவனை, Thirumalai Avanai - திருமாலாகிய அப்பெருமானை
அழைப்பன், Alaippan - கூப்பிடாநின்றேன்.