Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2232 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2232இரண்டாம் திருவந்தாதி || இப்படித் தாம் அடைவு கெட்டபடியை அனுசந்தித்து -நெஞ்சே -நீ முன்னம் என்னைப் போலே கலங்காதே அவனுடைய சௌந்தர்யாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் -என்கிறார் – பேச்சே அன்று நினைப்பன்-என்கிறார் – ஸ்ரமஹரமான வடிவை உடையவனுடைய திரு நிறத்தை அனுசந்தி- இப்படி அவன் திரு நாமத்தை சொல்லுகைக்குத் தம் ஈடுபாட்டை அனுசந்தித்தவர் -நெஞ்சே நீ முந்துற முன்னம் என்னைப்போல் கலங்கி தளராதே அவன் ஸுந்தரியாதிகளைத் தனித் தனியே தரித்து நின்று அனுபவிக்கப் பார் என்கிறார்- 51
மதிக்கண்டாய் நெஞ்சே மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன் பேர் தன்னை, – மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்.
நெஞ்சே, Nenchae - மனமே!
மணி வண்ணன் பாதம், Mani Vannan Paatham - நீலமணிவண்ணனான எம்பெருமானது திருவடிகளே
மதி கண்டாய், Madi Kandaai - அநுஸந்திக்கக்கடவாய்
பேர் ஆழி நின்று பெயர்ந்து, Per Aazhi Nindru Peyarnthu - பெரிய திருப்பாற் கடலில் நின்றும் துயில் விட்டெழுந்து
கடல் கடைந்த, Kadal Kadaindha - தேவர்களுக்கு அமுதங்கொடுக்க அக்கடலைக் கடைந்த
மதிகண்டாய், Madhikandai - சிந்திக்கக்கடவாய்
மற்று, Mattru - இன்னமும்
அவன் பேர் தன்னை, Avan Per Thannai - அப்பெருமானது திருநாமங்களை
நீராழி வண்ணன் நிறம், Neeraazhi Vannan Niram - கடல் வண்ணனான அப்பெருமானுடைய திருமேனி நிறத்தை
மதி கண்டாய், Madi Kandaai - நினைக்கக்கடவாய்