| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2233 | இரண்டாம் திருவந்தாதி || திரு உள்ளத்துக்கும் கூட உபதேசிக்க வல்ல தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய அழகையும் ஸ்ரீ பிராட்டி சம்பந்தத்தால் வந்த மிக்க கிருபையையும் சொல்ல இது ஒருவர்க்கும் நிலமல்ல கிடீர் -என்கிறார்- ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் நீல மேகத்திலே மின்னற் போலே ஸ்ரீ பிராட்டியை திரு மார்பிலே உடையானாய் அவளோட்டை கலவியாலே ஆந்ரு சம்சய பிரதானனான் ஆனபடியை யார் அறிவார் திரு உள்ளத்துக்கு உபதேசிக்க வல்லரான தம்மைக் கலங்கப் பண்ணின ஸ்ரீ யபதியுடைய வடிவு அழகையும் ஸ்ரீ பிராட்டி சம்பத்தால் வந்த மிக்க கிருபையையும் அனுசந்தித்து – இது ஒருவர்க்கும் நிலம் அல்ல கிடீர் -என்கிறார் 52 | நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன், அறம்பெரிய னார தறிவார்? – மறம்புரிந்த வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து , நீளிருக்கைக் குய்த்தான் நெறி. | நிறம் கரியன், Niram Kariyaan - (காளமேகம் போல்) கருநிறமுள்ளவனும் செய்ய நெடு மலராள் மார்வன், Seyya Nedu Malaraal Maarvan - சிவந்த நிறத்தையுடையளாய்ப் பெரிய தாமரைப்பூவை யிருப்பிடமாக வுடையளான பெரிய பிராட்டியாரைத் திருமார்விலே யுடையனுமான எம்பெருமான் அறம் பெரியன், Aram Periyan - அருளில் பெருத்தவன் மறம் புரிந்தவாள், Maram Purindhavaal - பகைபாராட்டின அரக்கன் போல்வானை, Arakkan Polvaanai - வாட்கையனான இராவணன் போன்ற மஹாபலியை (இராவனைப் போலவே தலையறுக்க வேண்டியிருந்தும் அது செய்யாமல்) வானவர் கோன் தானத்து, Vaanavar Kon Thaanththu - தேவேந்திரனுடைய லோகமானஸ்வர்க்கம்போலே விலக்ஷணமான பாதாள லோகத்தில் நீள இருக்கைக்கு, Neela Irukkaikku - நீண்டகாலம் வாழும்படியாக உய்த்தான், Uyithaan - செலுத்தின அப்பெருமானுடைய நெறி அது, Neri Adhu - அவ்வருள் வகையை ஆர் அறிவார், Ar Arivaar - யார் தெரிந்து கொள்ளவல்லர்? |