Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2234 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2234இரண்டாம் திருவந்தாதி || இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் – ஸ்ரீ திருவேங்கடமே நாம் ஆசைப்படும் ஸ்ரீ திருமலை -ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் – இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் – 53
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
அறியா திளங்கிரியென் றெண்ணி, – பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு.
நெறியார், Neriyaar - திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய
சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது, Soozhal Kattrai Mun Nindru Pin Thaazhnthu Ariyaadhu - கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்யவ்யக்தியென்று தெரிநிது கொள்ளாமல்
இள கிரி என்று எண்ணி, Ila Giri Endru Enni - இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக்கொண்டு
பூங்கொடிகள், Poongodigal - பூங்கொடிகளானவை
பிரியாது, Priyaadhu - அவ்விடம் விட்டு நீங்காமல்
வைகும், Vaikum - நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய்
பொரு புனல் குன்று என்னும், Poru Punal Kuntru Ennum - அலை யெறிகின்ற ஜலஸம்ருத்தியை யுடைத்தான திருமலையென்று ப்ரஸித்தமான
வேங்கடமே, Venkatame - திருவேங்கடமே
யாம் விரும்பும், Yaam Virumbum - நாம் ஆசைப்படவுரிய
வெற்பு, Verppu - திருமலையாகும்.