| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2234 | இரண்டாம் திருவந்தாதி || இப்படி மஹா பலி பக்கலும் கூட அனுக்ரஹத்தைப் பண்ணும் ஸ்வ பாவனானவன் கண்ணுக்கு இலக்காம்படி தன்னை சர்வ ஸ்வதானமாக பண்ணி வந்து வர்த்திக்கிற ஸ்ரீ திருமலை கிடீர் -நான் ஆதரிக்குமது என்கிறார் – ஸ்ரீ திருவேங்கடமே நாம் ஆசைப்படும் ஸ்ரீ திருமலை -ஸ்தாவர பிரதிஷ்டராய் இருந்து த்யாநிக்கிறவர்கள் – இப்படி ஆசூர பிரக்ருதிகள் அளவிலும் அனுக்ரஹ சீலனானவன் சர்வருக்கும் கண்ணாலே காணலாம் படி வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்ரீ திருமலை கிடீர் நாங்கள் ஆதரிப்பது -என்கிறார் – 53 | நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து, அறியா திளங்கிரியென் றெண்ணி, – பிறியாது பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும், வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு. | நெறியார், Neriyaar - திருமலை வழியிலேயே ஊன்றியிருப்பவர்களுடைய சூழல் கற்றை முன் நின்று பின் தாழ்ந்து அறியாது, Soozhal Kattrai Mun Nindru Pin Thaazhnthu Ariyaadhu - கேச பாச மானது முன்னே முளைத்துப் பின்னே தொங்கிக் கொண்டிருக்கவும் இது மநுஷ்யவ்யக்தியென்று தெரிநிது கொள்ளாமல் இள கிரி என்று எண்ணி, Ila Giri Endru Enni - இது ஒரு சிறுமலை யென்று எண்ணிக்கொண்டு பூங்கொடிகள், Poongodigal - பூங்கொடிகளானவை பிரியாது, Priyaadhu - அவ்விடம் விட்டு நீங்காமல் வைகும், Vaikum - நித்யவாஸம் பண்ணப் பெற்றதாய் பொரு புனல் குன்று என்னும், Poru Punal Kuntru Ennum - அலை யெறிகின்ற ஜலஸம்ருத்தியை யுடைத்தான திருமலையென்று ப்ரஸித்தமான வேங்கடமே, Venkatame - திருவேங்கடமே யாம் விரும்பும், Yaam Virumbum - நாம் ஆசைப்படவுரிய வெற்பு, Verppu - திருமலையாகும். |