Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2235 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2235இரண்டாம் திருவந்தாதி || இவனுக்கு எல்லை நிலமான ஸ்ரீ திருமலை அளவும் அவர் விரும்பினவாறே அவனும் தனக்கு வாஸ ஸ்தானமாக நினைத்து இருக்கும் ஸ்ரீ திருமலைகள் இரண்டிலும் பண்ணக் கடவ ஆதாரத்தை இவர் திரு உள்ளம் ஒன்றிலுமே பண்ணினானாய் இருக்கிறது – இவன் ஸ்ரீ திருமலையை விரும்பிப் புக்கவாறே-அவன் இவருடைய ஹிருதயத்தை விரும்ப பிரானே -அவற்றை கை விடாத ஒண்ணாதே என்கிறார் இப்படி தாம் அவன் உகந்து வர்த்திக்கும் திருமலை அளவும் விரும்புகையாலே இவனும் தான் உகந்து வர்த்திக்கிற இரண்டு ஸ்ரீ திருமலைகளில் பண்ணும் விருப்பத்தைத் தம் திரு உள்ளத்தில் ஒன்றிலும் பண்ணிக் கொண்டு மேலே விழுகிற படியை அருளிச் செய்கிறார் – 54
வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல் என்று.
வெற்பு என்ற, Verppu Endra - (தெற்கு) திருமலை யென்னப்படுகிற
இருஞ்சோலை, Iruncholai - திருமாலிருஞ் சோலையென்ன
வேங்கடம், Vengadam - திருவேங்கடமென்ன
என்ன இவ் இரண்டும், Enna Iv Irandum - ஆகிய இத்திருமலை களிரண்டும்
நிற்பு என்று, Nirppu Endru - நாம் உகந்து வாழுமிடமென்று
நீ மதிக்கும் நீர்மை போல், Nee Mathikkum Neermai Pol - நீ திருவுள்ளம்பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே
உளம் கோயில், Ulam Koyil - (என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்
நிற்பு என்று, Nirppu Endru - நீ உகந்து வாழுமிடமென்று
உள்ளம் வைத்து, Ullam Vaitthu - பிரதிபத்தி பண்ணி
வெள்ளத்து இள கோவில், Vellathu Ila Kovil - திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை
கைவிடேல் என்று, Kaivideel Endru - கைவிட வேண்டா என்ற
உள்ளினேன், Ullinena - பிரார்த்திக்கின்றேன்.