Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2236 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2236இரண்டாம் திருவந்தாதி || இப்படி தேவர் என் பக்கலில் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தால் குறை யற்றேன் – அதனுடைய பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவரே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் உன்னை நினைக்காக அரிதான சம்சாரத்திலே உன்னை நினைக்கும் படி பண்ணினாய் – இனி ப்ராப்தி யளவும் பண்ணாய் -என்கிறார்- உன்னை நினைக்கை அரிதான சம்சாரத்திலே-உன்னை நினைக்கும் படி பண்ணினாய் இனி பிராப்தி அளவும் பண்ணாயோ என்கிறார் – இப்படி தேவர் என் பக்கல் விருப்பத்தைப் பண்ணுகையாலே ஞான லாபத்தில் குறைவற்றேன் தத் பலமான ப்ராப்தியால் வரும் அனுபவத்தையும் தேவர் தாமே பண்ணித் தந்து அருள வேணும் -என்கிறார் – 55
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால், – வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண்.
வென்றி, Vendri - ஜய சீலமாய்
அடல், Adal - திக்ஷணமான
ஆழி, Aazhi - சக்கரத்தை
அறிவனே, Arivane - ஸர்வஜ்ஞனான பெருமானே!
ஏழ் விறப்பும், Ezhu Virappum - இப்படியிருக்கிற நீ எல்லா ஜன்மங்களிலும்
எப்பொழுதும், Eppozhudum - எல்லா அவஸ்தைகளிலும்
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால், Ninru Ninaippu Ozhia Neermiyal - ஒரு படிப்பட நின்று என்னைப் பற்றின நினைவு தப்பாமலிருந்ததனால்
என்றும் மறந்தறியேன், Endrum Marandariyen - உன்னை ஒருநாளும் மறப் பனல்லேன்
இன்பம் கடல் ஆழி, Inbam Kadal Aazhi - ஆநந்த ஸாகரத்தையும்
அருளிக்காண், Arulikkaan - எனக்கு அருள வேணும்.