Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2238 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2238இரண்டாம் திருவந்தாதி || இப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடு கூடி யுள்ளவன் கிடி கோள் -சர்வ சமாஸ்ரயணீயன் -என்கிறார்- நாங்கள் அவனுடைய பேரையும் திருவடிகளையும் சேஷபூதர் என்னும் பிராப்தியாலே ஏத்தினோம் இப்படி ஸ்ரீ பெரிய பிராட்டியாரோடே கூடி இருந்துள்ளவன் கிடி கோள்-சர்வ ஸமாச்ரயணீயன் -என்கிறது – 57
திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர், – உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்?
திரு மங்கை, Thiru Mangai - பெரிய பிராட்டியார்
நின்றருளும் தெய்வம், Ninrarulum Deivam - நித்யவாஸஞ் செய்யப் பெற்ற எம்பெருமானை
நா வாழ்த்தும் கருமம், Naa Vaazhthum Karumam - நாவினாலே வாழத்துகையாகிற காரியத்தை
பாதம், Patham - திருவடிகளையும்
பேர், Per - திருநாமங்களையும்
உரிமையால், Urimaiyaal - ஸ்வரூப ப்ராப்தியாலே
ஏத்தினோம், Aethinome - போற்றுமவர்களாயிராநின்றோம்
கடைப்பிடி மின் கண்டீர், Kadaippidi Min Kandheer - உறுதியாகப் பற்றுங்கள்
நாம், Naam - நாமோவென்றால்
இது தடைகை எத்தை, Idhu Thadaikai Eththai - மிக நீண்ட திருக்கைகளை யுடையனான எம்பெருமானுடைய (இவ்விஷயத்தை)
நால் திசையும், Naal Thisaiyum - நான்கு திசைகளிலுமுள்ளீர்!
கேட்டீரே, Kaettire - கேட்டீர்களோ?