திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2239 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2239இரண்டாம் திருவந்தாதி || நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்- நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–ஸ்ரீ சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து என்னை ஓதி வைத்தது என்கிறார் – நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் – 58
நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, – வேம்பின் பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று, அருள்நீர்மை தந்த அருள்.
பதவுரை Show / Hide
வேம்பு பொருளின் நீர்மை ஆயினும், Vembu Porulin Neermai Aayinum - (எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும் வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகந்தோன்றினாலும்
பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தியழகை)
பாடு என்று, Paadu Endru - பாடக்கடவாய் என்று
நா மங்கை, Naa Mangai - ஸ்ரஸவதியானவள்
நெஞ்சத்து, Nenchatthu - (நமது) நல்ல நெஞ்சிலே
ஒம்பி இருந்து, Ombi Irundhu - ஆதரித்து இருந்து
எம்மை, Emmai - நீர்மைக்கொண்டு
ஓது வித்து, Othu Viththu - பகவத்விஷயத்தைப் பாடச்செய்ததனால்
நாம் பெற்று நன்மையும், Naam Pettru Nanmaiyum - தாம் அடைந்த ஸுக்குதமு (எதனாலே வந்ததென்னில்)
அருள் நீர்மை தந்த அருள், Arul Neermai Thanda Arul - அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது.