| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2239 | இரண்டாம் திருவந்தாதி || நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாயிற்று ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாஷத்தால் -என்கிறார்- நீர் இப்படி யேத்துகைக்கு அடி என் என்னில்–ஸ்ரீ சரஸ்வதி என் ஹிருதயத்தில் இருந்து என்னை ஓதி வைத்தது என்கிறார் – நமக்கு இந்த நன்மை எல்லாம் உண்டாய்த்து ஸ்ரீ சர்வேஸ்வரனுடைய கடாக்ஷத்தாலே -என்கிறார் – 58 | நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து, – வேம்பின் பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று, அருள்நீர்மை தந்த அருள். | வேம்பு பொருளின் நீர்மை ஆயினும், Vembu Porulin Neermai Aayinum - (எம்பெருமானைப் பாடுவதானது) வேம்பு என்னும் வஸ்துவின் ஸ்வபாவம் போலே கைப்பதாகந்தோன்றினாலும் பொன் ஆழி, Pon Aazhi - அழகிய திருவாழியை (கையுந்திருவாழியுமான சோத்தியழகை) பாடு என்று, Paadu Endru - பாடக்கடவாய் என்று நா மங்கை, Naa Mangai - ஸ்ரஸவதியானவள் நெஞ்சத்து, Nenchatthu - (நமது) நல்ல நெஞ்சிலே ஒம்பி இருந்து, Ombi Irundhu - ஆதரித்து இருந்து எம்மை, Emmai - நீர்மைக்கொண்டு ஓது வித்து, Othu Viththu - பகவத்விஷயத்தைப் பாடச்செய்ததனால் நாம் பெற்று நன்மையும், Naam Pettru Nanmaiyum - தாம் அடைந்த ஸுக்குதமு (எதனாலே வந்ததென்னில்) அருள் நீர்மை தந்த அருள், Arul Neermai Thanda Arul - அருளையே இயல்வாகவுடைய ஸர்வேச்வரன் அருளிய க்ருபையினாலே வந்தது. |