Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2240 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2240இரண்டாம் திருவந்தாதி || இந்த லாபத்துக்கு அடியான பிரதம தர்சனம் இருந்தபடியைச் சொல்கிறார்- ஆராய்ந்து பார்த்து பரதந்த்ரமாய் இருக்கையாலே என்னை உன் திருவடிகளிலே சமர்ப்பித்தேன் அருள் புரிந்த உன் திரு உள்ளத்தை எங்கள் மேல் வைத்து எங்களை ஒரு பதார்த்தமாக புத்தி பண்ணின போது -என்றுமாம் இந்த லாபத்துக்கு அடியாக அடியிலே அவன் நிர்ஹேதுகமாக தம்மைக் கடாஷித்த படி -சொல்லுகிறார் – 59
அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தெரிந்து காண்குற்ற அப்போது, – இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன தொண்கமலம்,
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.
அருள் புரிந்த சிந்தை, Arul Purindha Chinthai - அருளோடு கூடின திருவுள்ளத்தை
அடியார் மேல் வைத்து, Adiyaar Mael Vaiththu - அடியவராகிய எங்கள் மேலே வைத்து
பொருள் தெரிந்து, Porul Therinthu - அபதார்த்தமாகத் திருவுள்ளம் பற்றி
காண்குற்ற அப்போது, Kaankutra Appodhu - கடாக்ஷித்தருளுகிற காலத்திலே
இருள் இரிந்து, Irul Irinthu - அஜ்ஞான விருள் நீங்கப் பெற்று
நோக்கினேன், Nookkinen - ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்
நோக்கி, Nookki - அப்படி ஆராய்ந்து
ஒன் கமலம் அது, On Kamalam Adhu - அழகிய தாமரை மலர்களை என்னலாம் படியுள்ள அத்திருவடிகளை
நினைந்தேன், Ninaindhen - (ப்ராப்யமாக அநுஸ்ந்தித்தேன்
ஓர்ந்து, Oorndhu - (இத்திருவடிகள் தவிர நமக்கு வேறுபுகலில்லையென்று நிரூபித்து
என்னையும், Ennaiyum - ஆத்மாவையும்
அங்கு, Angu - அத்திருவடிகளிலே
ஒக்கினேன், Okkinen - ஸமர்ப்பித்தேன்.