Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2241 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2241இரண்டாம் திருவந்தாதி || இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர்யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் – தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூமியை முறை குலையாமல் காப்பார் -தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே- இப்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே – நிரங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம் என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் – 60
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று.
ஓர் உருவம் அல்லை, Oor Uruvam Allai - (எம்பெருமானே) பரத்வமேவடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம், Oli Uruvam - ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம், Nin Uruvam - உனது வடியாம் (இப்படி ஆச்ரிதபாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர், Iru Nilaththoor - இப்பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர், Eer Uruvan Enbar - பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம், Oor Uruvam - ஆச்ரிதபாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம், Aadhi Aam Vannam - எல்லார்க்கும் உஜ்ஜீவநஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர், Arindhaaravar Kandeer - தெரிந்துகொள்ளுமவர்களே
நீதியால், Neethiyaal - நியாயப்படி
நின்று, Ninru - நிலைத்து நின்று
மண் காப்பார், Man Kappaar - உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.