திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2241 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2241இரண்டாம் திருவந்தாதி || இப்படி அனுசந்தித்த இவர் ஐஸ்வர்யத்திலும் ஆஸ்ரித பார தந்திரியமே அவனுக்கு ஸ்வரூபம் என்று அறிவர் கிடீர் – தனக்கான ஜகத்தை என்றும் ரஷிப்பன் என்று ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் திறத்து ஸூலபனான படியைச் சொல்லுகிறார் – எல்லார்க்கும் சத்தை அவனே என்று அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் பூமியை முறை குலையாமல் காப்பார் -தீர்த்தகரராமின் திரிந்து -என்னும்படியே- இப்படி ஸ்ரீ சர்வேஸ்வரன் தன் பெருமை பாராதே எளியனாய் தம்மையே விஷயீ கரித்த நீர்மையை அனுசந்திக்கையாலே – நிரங்குச ஸ்வ தந்த்ரனான மேன்மை அன்று அவனுக்கு நிலை நின்ற வேஷம் -ஆஸ்ரித பாரதந்த்ரயமே நிலை நின்ற வேஷம் என்று அறிந்து இருக்குமவர்கள்– ஜகத்தை சர்வ காலமும் ரக்ஷிக்குமவர்கள் என்கிறார் – 60
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம், ஈருருவன் என்பர் இருநிலத்தோர், ஓருருவம் ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர், நீதியால் மண்காப்பார் நின்று.
பதவுரை Show / Hide
ஓர் உருவம் அல்லை, Oor Uruvam Allai - (எம்பெருமானே) பரத்வமேவடியாக இருப்பவனன்று நீ,
ஒளி உருவம், Oli Uruvam - ஆச்ரித பரதந்த்ரமாய்க் கொண்டு ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம
நின் உருவம், Nin Uruvam - உனது வடியாம் (இப்படி ஆச்ரிதபாரதந்திரியமே வடியாவிருக்கிற உன்னை)
இரு நிலத்தோர், Iru Nilaththoor - இப்பெரிய பூமண்டலத்திலுள்ளவர்கள்
ஈர் உருவன் என்பர், Eer Uruvan Enbar - பரத்வமாகிற பெரிய வடிவை யுடையனாகச் சொல்லு கின்றனர்
ஓர் உருவம், Oor Uruvam - ஆச்ரிதபாரதந்திரிய மாகிய ஒரு வடிவே
ஆதி ஆம் வண்ணம், Aadhi Aam Vannam - எல்லார்க்கும் உஜ்ஜீவநஹேதுவாயிருக்கு மென்பதை
அறிந்தாரவர் கண்டீர், Arindhaaravar Kandeer - தெரிந்துகொள்ளுமவர்களே
நீதியால், Neethiyaal - நியாயப்படி
நின்று, Ninru - நிலைத்து நின்று
மண் காப்பார், Man Kappaar - உலகத்தை ரக்ஷிக்க வல்லவராவர்.